Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 27 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
27ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 5
பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பை முன் கீண்டான்
குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5
முன்,Mun - முற்காலத்திலே
மறம்கொள்,Maramkol - த்வேஷங்கொண்ட
இரணியன்,Eranian - ஹிரண்யனுடைய
மார்வை,Maarvai - மார்பை
கீண்டான்,Keendan - பிளந்தவனாய்,
பிறங்கிய,Pirangiya - (கொடுமையால் வந்த) ப்ரகாசத்தை யுடைய
பேய்ச்சி,Peychchi - பூதனையினுடைய
முலை,Mulai - முலையை
சுவைத்து,Suvaiththu - (பசையறும்படி) ஆஸ்வாதித்து
உண்டிட்டு,Undittu - அமுது செய்து
உறங்குவான் போலே,Uranguvaan pole - (ஒன்றுமறியாமே) உறங்குமவனைப் போலே
கிடந்த,Kidandha - படுத்திருப்பவனான
இ பிள்ளை,E pillai - இந்தக் கண்ணனுடைய
குறங்குகளை வந்து காணீர்!,Kurangugalai vandhu kaanire - திருத்துடைகளை வந்து காணீர்!
குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyer - குவிந்த முலைகளை யுடைய பெண்காள்! வந்து காணீர்!!