| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 27 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 5 | பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத் துண்டிட்டு உறங்குவான் போலே கிடந்த இப் பிள்ளை மறங்கொ ளிரணியன் மார்பை முன் கீண்டான் குறங்குகளை வந்து காணீரே குவி முலையீர் வந்து காணீரே–1-2-5 | முன்,Mun - முற்காலத்திலே மறம்கொள்,Maramkol - த்வேஷங்கொண்ட இரணியன்,Eranian - ஹிரண்யனுடைய மார்வை,Maarvai - மார்பை கீண்டான்,Keendan - பிளந்தவனாய், பிறங்கிய,Pirangiya - (கொடுமையால் வந்த) ப்ரகாசத்தை யுடைய பேய்ச்சி,Peychchi - பூதனையினுடைய முலை,Mulai - முலையை சுவைத்து,Suvaiththu - (பசையறும்படி) ஆஸ்வாதித்து உண்டிட்டு,Undittu - அமுது செய்து உறங்குவான் போலே,Uranguvaan pole - (ஒன்றுமறியாமே) உறங்குமவனைப் போலே கிடந்த,Kidandha - படுத்திருப்பவனான இ பிள்ளை,E pillai - இந்தக் கண்ணனுடைய குறங்குகளை வந்து காணீர்!,Kurangugalai vandhu kaanire - திருத்துடைகளை வந்து காணீர்! குவி முலையீர் வந்து காணீரே,Kuvi mulaiyer - குவிந்த முலைகளை யுடைய பெண்காள்! வந்து காணீர்!! |