| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 270 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 7 | படங்கள் பலவுமுடைப் பாம்பரையன் படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் தடங்கை விரலைந்தும் மலர வைத்துத் தாமோதரன் தாங்கு தட வரை தான் அடங்கச் சென்று இலங்கையை யீடழித்த அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும் கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே–3-5-7 | படங்கள் பலவும் உடை,Padangal Palavum Udai - பல படங்களை யுடைய பாம்பு அரையன்,Paambu Araiyan - ஆதிசேஷன் படர் பூமியை,Padar Bhoomiyai - பரம்பின பூமியை தாங்கி கிடப்பவன் போல்,Thaangi Kidappavan Pol - (தன் தலைகளினால்) தாங்கிக் கொண்டிருப்பது போல, தாமோதரன்,Thaamodharan - கண்ணபிரான் தடங்கை,Thadangkai - (தனது) பெரிய திருக் கைகளிலுள்ள விரல் ஐந்தும்,Viral Aindhum - ஐந்து விரல்களையும் மலர வைத்து,Malar Vaithu - மலர்த்தி (விரித்து) தாங்கு,Thaangu - (அவற்றாலே) தாங்கப் பெற்ற தடவரை,Thadavarai - பெரிய மலையாவது; மந்திகள்,Mandhigal - பெண் குரங்குகளானவை, இலங்கையை சென்று,Ilangaiyai Sendru - லங்காநகரத் தேறப்போய் அடங்க,Adanga - அவ்வூர் முழுவதையும் ஈடு அழித்த,Eedu Azhitha - சீர்கெடும்படி பங்கப்படுத்தின அனுமன்,Anuman - சிறிய திருவடியினுடைய புகழ்,Pugazh - கீர்த்தியை பாடி,Paadi - பாடிக் கொண்டு தம் குட்டன்களை,Tham Kuttanagalai - தமது (குரங்குக்) குட்டிகளை குடங்கைக் கொண்டு,Kudangai Kondu - கைத்தலத்தில் படுக்க வைத்துக் கொண்டு கண் வளர்த்தும்,Kann Valarthum - (சீராட்டி) உறங்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |