| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 272 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம்பத்து-ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி (கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்) எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் 9 | வன் பேய் முலை யுண்ட தோர் வாயுடையன் வன் தூணென நின்றதோர் வன் பரத்தை தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில் தாமோதரன் தாங்கு தட வரை தான் முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை கொம்பேற்றி யிருந்து குதி பயிற்றும் கோவர்த்தனமென்னும் கொற்றக் குடையே–3-5-9 | வன் பேய்,Van Pey - கல் நெஞ்சளான பூதனையினுடைய முலை,Mulai - (விஷந்தடவின) முலையை உண்டது ஓர் வாய் உடையன்,Undathu Or Vaai Udaiyan - (உறிஞ்சி) உண்ட வாயை யுடையனான தாமோதரன்,Thaamodharan - கண்ணபிரான் தன் பேர்,Than Per - (கோவர்த்தநன் என்ற) தனது திருநாமத்தை இட்டுக் கொண்டு,Ettuk Kondu - (மலைக்கு) இட்டு, வல்பரத்தை நின்றது ஓர் வன் தூண் என,Valparathai Nindrathu Or Van Thoon Ena - பலிஷ்டமானதொரு பாரத்தைத் தாங்கிக் கொண்டுநின்ற ஒரு வலிய தூணைப் போல நின்று தரணி தன்னில்,Tharani Thannil - இந்நிலவுலகத்தில் தான் தாங்கு,Thaan Thaangu - (உள்ளவர்கள் காணும்படி) தான் தாங்கிக் கொண்டு நின்ற தடவரை,Thadavari - பெரிய மலையாவது; முசு கணங்கள்,Musu Kanangal - முசு என்ற சாதிக் குரங்குகளின் திரள்கள் முன்பே,Munbe - (தம் குட்டிகளுக்கு) ஏற்கனவே வழி காட்ட,Vali Kaata - ஒருகிளையில் நின்றும் மற்றொரு கிளையில் பாயும் வழியைக் காட்டுகைக்காக தம்முடை குட்டன்களை,Thammudai Kuttanagalai - தம்தம் குட்டிகளை முதுகில் பெய்து,Mudugil Peithu - (தம் தம்) முதுகிலே கட்டிக் கொண்டு போய் கொம்பு,Kombu - மரக் கொம்பிலே ஏற்றி யிருந்து,Etri Irundhu - ஏற்றி வைத்து குதி பயிற்றும்,Kuthi Payitrum - அக்கொம்பில் நின்றும் மற்றொரு கொம்பில் குதித்தலைப் பழக்குவியா நிற்கப் பெற்ற கோவர்,Kovar - குடையே-. |