Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 279 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
279ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஆறாம் திருமொழி - நாவலம்) (கண்ணன் புல்லங்குழலூதற்சிறப்பு) 5
முன் நரசிங்கமதாகி அவுணன் முக்கியத்தை முடிப்பான் மூ வுலகில்
மன்னரஞ்சும் மது சூதனன் வாயில் குழலி னோசை செவியைப் பற்றி வாங்க
நன்னரம்புடைய தும்புருவோடு நாரதனும் தம் தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம் தம் கின்னரம் தொடுகிலோ மென்றனரே–3-6-5
முன்,Mun - முற்காலத்திலே
நரசிங்கம் அது ஆகி,Narasingam Athu Aagi - நரஸிம்ஹ ரூபங்கொண்டு
அவுணன்,Avunan - ஹிரண்யாஸுரனுடைய
முக்கியத்தை,Mukkiyaththai - மேன்மையை
முடிப்பான்,Mudippan - முடித்தவனும்
மூ உலகில் மன்னர்,Moo Ulahil Mannar - மூன்று லோகத்திலுமுள்ள அரசர்கள்
அஞ்சும்,Anjum - (தனக்கு) அஞ்சும்படியா யிருப்பவனுமான
மதுசூதனன்,Madhusoodhanan - கண்ணபிரானுடைய
வாயில்,Vaayil - வாயில் (வைத்து ஊதப் பெற்ற)
குழலின்,Kuzhalin - வேய்ங்குழலினுடைய
ஓசை,Osai - ஸ்வரமானது
செவியை,Sevviyai - காதுகளை
பற்றி வாங்க,Patri Vaanga - பிடித்திழுக்க
நல் நரம்பு உடைய,Nal Narambu Udaiya - நல்ல வீணையைக் கையிலுடைய
தும்புருவோடு,Thumburuvodu - தும்புரு முனிவனும்
நாரதனும்,Naradhanum - நாரத மஹர்ஷியும்
தம் தம்,Tham Tham - தங்கள் தங்களுடைய
வீணை,Veenai - வீணையை
மறந்து,Marandhu - மறந்து விட
கின்னரம் மிதுனங்களும்,Kinnaram Mithunangalum - கிந்நர மிதுநம் என்று பேர் பெற்றுள்ளவர்களும்
தம் தம் கின்னரம்,Tham Tham Kinnaram - தங்கள் தங்கள் கின்னர வாத்தியங்களை
தொடுகிலோம் என்றனர்,Thodukilom Endranar - ’(இனித் தொடக்கடவோமல்லோம்’ என்று விட்டனர்.