Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 28 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
28ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 6
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–1-2-6
மத்தம்,Maththam - மதத்தையுடைய
களிறு,Kaliru - யானைகளை நிர்வஹிக்குமவரான
வசுதேவர் தம்முடை,Vasudevar thammudai - ஸ்ரீவஸுதேவருடைய
சித்தம் பிரியாத,Siththam priyadha - மனத்தை விட்டுப் பிரியாத
தேவகி தன்,Devagi than - தேவகியினுடைய
வயிற்றில்,Vayitrril - வயிற்றிலே
அத்தத்தின் பத்தாம் நாள்,Aththaththin paththaam naal - ஹஸ்த நக்ஷத்ரத்துக்குப் பத்தாவதான திரு நாளிலே
தோன்றிய,Thonriya - திருவவதரித்த
அச்சுதன்,Achchuthan - கண்ண பிரானுடைய
முத்தம் இருந்த ஆ காணீரே,Muththam irundha aa kaanire - சண்ணமிருந்த படியை காணீர்!!
முகிழ் நகையீர் வந்து காணீரே,Mugil nagaiyeer vandhu kaanire - புன் சிரிப்பை யுடைய பெண்காள்! வந்து காணீர்!!