| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2842 | திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (நித்ய ஸூரிகளுக்குப் போலே எனக்குத் தன்னுடைய ஸௌந்தரியம் முதலானவற்றை வருணிப்பதற்குப் பாங்கான வாக்கை அளித்தருளினானெம்பெருமான்; அவனுடைய வள்ளல் தனம் இருக்கும்படி என்னே! என்று விஸ்மயப்படுகிறார்.) 3 | தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப் பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை நா மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர் பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3 | தாமரை கண்ணனை,Thaamarai Kannai - தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனும் விண்ணோர்பரவும்,Vinnorparavum - நித்யஸுரிகள் புகழ்கின்ற தலைமகனை,Thalaimaganai - ஸ்வாமியும் விரை பூ மருவு,Virai Poo Maruvu - பரிமளமுள்ள புஷ்யங்கள் பொருந்திய துழாய் கண்ணி,Thuzhai Kanni - திருத்துழாய் மாலையை யணிந்த எம்பிரானை,Empranai - எம்பெருமானும் பொன் மலையை,Pon Malaiyai - பொன்மலை போன்று உயர்ந்து விளங்குபவனுமான திருமாலை யாம் அடைந்து நன்கு ஏத்தி,Nanku yethi - நன்றாகத் துதித்து உள்ளி,Ulli - சிந்தித்து வணங்கி,Vanangi - நமஸ்கரித்து (இப்படி மூன்று கரணங்களாலுமுண்டான அநுபவத்தாலே) நாம் மகிழ்ந்து ஆட,Naam Magizhndhu Aada - நாம் ஸந்தோஷத்தோடு நர்த்தனம் பண்ணும் படியாகவும் நா அலர் பா மருவி நிற்க,Naa Alar Paa Maruvi Nirka - நாக்கில் அலர்கின்ற பாசுரங்களிலே பொருந்தி நிற்கும்படியாகவும் தந்த,Thandha - உபகாரம் செய்தருளின வள்ளல் பான்மை ஏ,Vallal Paanmai ye - உதாரகுணம் என்னே! |