Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2842 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2842திருவாய்மொழி || (2-6–வைகுந்தா மணிவண்ணனே) (ஆழ்வார் இறைவனைச் சிக்கெனப் பிடித்தல்) (நித்ய ஸூரிகளுக்குப் போலே எனக்குத் தன்னுடைய ஸௌந்தரியம் முதலானவற்றை வருணிப்பதற்குப் பாங்கான வாக்கை அளித்தருளினானெம்பெருமான்; அவனுடைய வள்ளல் தனம் இருக்கும்படி என்னே! என்று விஸ்மயப்படுகிறார்.) 3
தாமரைக் கண்ணனை விண்ணோர் பரவும் தலைமகனை துழாய் விரைப்
பூ மருவி கண்ணி எம்பிரானைப் பொன் மலையை
நா மருவி நன்கேத்தி யுள்ளி வணங்கி நாம் மகிழ்ந்தாட நா வலர்
பா மருவி நிற்கத் தந்த பான்மையே வள்ளலே –2-6-3
தாமரை கண்ணனை,Thaamarai Kannai - தாமரை மலர் போன்ற திருக்கண்களை யுடையவனும்
விண்ணோர்பரவும்,Vinnorparavum - நித்யஸுரிகள் புகழ்கின்ற
தலைமகனை,Thalaimaganai - ஸ்வாமியும்
விரை பூ மருவு,Virai Poo Maruvu - பரிமளமுள்ள புஷ்யங்கள் பொருந்திய
துழாய் கண்ணி,Thuzhai Kanni - திருத்துழாய் மாலையை யணிந்த
எம்பிரானை,Empranai - எம்பெருமானும்
பொன் மலையை,Pon Malaiyai - பொன்மலை போன்று உயர்ந்து விளங்குபவனுமான திருமாலை யாம் அடைந்து
நன்கு ஏத்தி,Nanku yethi - நன்றாகத் துதித்து
உள்ளி,Ulli - சிந்தித்து
வணங்கி,Vanangi - நமஸ்கரித்து (இப்படி மூன்று கரணங்களாலுமுண்டான அநுபவத்தாலே)
நாம் மகிழ்ந்து ஆட,Naam Magizhndhu Aada - நாம் ஸந்தோஷத்தோடு நர்த்தனம் பண்ணும் படியாகவும்
நா அலர் பா மருவி நிற்க,Naa Alar Paa Maruvi Nirka - நாக்கில் அலர்கின்ற பாசுரங்களிலே பொருந்தி நிற்கும்படியாகவும்
தந்த,Thandha - உபகாரம் செய்தருளின
வள்ளல் பான்மை ஏ,Vallal Paanmai ye - உதாரகுணம் என்னே!