Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 286 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
286ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1
ஐய புழுதி உடம்ப ளைந்து இவள் பேச்சு மலந்த லையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள்
கையி னில் சிறு தூதை யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பைய ரவணைப் பள்ளி யானோடு கை வைத்து இவள் வருமே–3-7-1
இவள்,Eval - இச் சிறு பெண்ணானவள்
ஐய புழுதியை,Ayya Puzhudhiyai - அழகிய புழுதியை
உடம்பு அளைந்து,Udambu Alaindhu - உடம்பிலே பூசிக் கொண்டு
பேச்சும் அலந்தலை ஆய்,Pechchum Alandhalai Aay - ஒன்றோடொன்று அந்வயியாத பேச்சை யுமுடையளாய்
செய்ய நூலின் சிறு ஆடை,Seyya Noolin Siru Aadai - சிவந்த நூலாலே செய்விக்கப்பட்ட சிற்றாடையை
செப்பன்,Seppan - செம்மையாக
உடுக்கவும் வல்லன் அல்லன்,Udukkavum Vallan Allan - [அரையில் தங்கும்படி] உடுக்கவும் மாட்டாதவளாயிரா நின்றாள்;
இவள்,Eval - இப்படியொரு பருவத்தை யுடையளான இவள்
சிறு தூதையோடு,Siru Thoodhaiyodu - (மணற்சோறாக்கும்) சிறிய தூதையையும்
முற்றிலும்,Mutrilum - சிறு சுளகையும்
கையினில்,Kaiyinil - கையில் நின்றும்
பிரிந்து இவள்,Pirindhu Ival - விட்டொழிகின்றிலள்;
இவள்,Eval - இப்படிக்கொத்த விளையாட்டை யுடைய இவள்
பை அரவு அணை பள்ளியானொடு,Pai Aravu Anai Palliyaanodu - சேஷ சாயியான எம்பெருமானுடனே
கை வைத்து வரும்,Kai Vaitthu Varum - கை கலந்து வாரா நின்றாள்.