| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 287 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில சாய்விலாத குறுந்தலைச் சில பிள்ளைகளோ டிணங்கி தீயிணக்கிணங்காடி வந்து இவள் தன்னன்ன செம்மை சொல்லி மாயன் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறு கின்றாளே–3-7-2 | வாயில்,Vayil - (இம் மகளுடைய) வாயில் பல்லும் எழுந்தில,Pallum Ezhundhila - பற்களும் முளைக்க வில்லை; மயிரும் முடி கூடிற்றில,Mayirum Mudi Koodittrila - மயிரும் சேர்த்து முடிக்கும்படி கூடவில்லை. இவள்,Eval - இப்படிப்பட்ட இவள் இவண்,Evan - இந்தப் பருவத்தில் சாய்வு இலாத,Saivu Ilaadha - தலை வணக்கமில்லாத குறுந்தலை,Kurunthalai - தண்மையில் தலை நின்ற சில பிள்ளைகளோடு,Sila Pillailaodu - சில பெண் பிள்ளைகளோடு இணங்கி,Enangi - ஸஹ வாஸம் பண்ணி தீ இணக்கு இணங்காடி வந்து,Thee Inakku Inangaadi Vandhu - (அதற்குப் பலனாக) பொல்லாத இணக்கத்தை (களவுப் புணர்ச்சியை)ச் செய்து வந்து (இத்தனை போது எங்குப் போனாய்? யாரோடு இணங்கி வந்தாய்? என்று நான் கேட்டால்) தன் அன்ன,Than Anna - தனக்கு ஒத்த வார்த்தைகளை செம்மை சொல்லி,Semmai Solli - கபடமற்ற வார்த்தை போல் தோற்றும்படி சொல்லி இவள்; மாயன் மா மணிவண்ணன் மேல்,Maayan Maa Manivannan Mel - அற்புதச் செய்கைகளையும் நீலமணி நிறத்தையுமுடையனான கண்ணபிரான் மாலுறுகின்றாள்,Maal Urugindraal - மோஹப்படுகிறாள். |