| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 288 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 3 | பொங்கு வெண் மணல் கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்க லுறில் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லு மல்லது இழைக்க லுறாள் கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில கோவிந்த னோடு இவளை சங்கை யாகி என் னுள்ளம் நாள் தொறும் தட்டுளுப்பாகின்றதே–3-7-3 | பொங்கு,Pongu - (இவள்)நுண்ணியதாய் வெள்,Vel - வெளுத்திரா நின்ற மணல் கொண்டு,Manal Kondu - மணலாலே முற்றத்து,Mutrathu - முற்றத்திலே சிற்றில்,Sittril - கொட்டகத்தை இழைக்கலுறிலும்,Izhaikkalurilum - நிர்மாணஞ் செய்யத் தொடங்கினாலும் சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது,sangu chakaram Thandu Vaal Villum Alladhu - சங்கு முதலிய எம்பெருமான் சின்னங்களை யொழிய (மற்றொன்றையும்) இழைக்கலுறாள்,Izhaikkalurall - இழைக்க நினைப்பதில்லை; இன்னம்,Innam - (இவளுக்கோ வென்றால்) இன்றளவும் கொங்கை,Kongai - முலைகளானவை குவிந்து எழுந்தில,Kuvindhu Ezhundhila - முகம் திரண்டு கிளர்ந்தன வில்லை; இவளை,Ivalai - இப்படி இளம் பருவத்தளான இவளை கோவிந்தனோடு சங்கை ஆகி,Govindhanoodu Sangai Aagi - கண்ணபிரானோடு சம்பந்த முடையவளாகச் சங்கித்து என் உள்ளம்,En Ullam - என் நெஞ்சமானது நாள் தொறும்,Naal Thorum - ஸர்வ காலமும் தட்டுளுப்பாகின்றது,Thattuluppaagindrathu - தடுமாறிச் செல்லா நின்றது. |