Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 2890 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2890திருவாய்மொழி || (2-10–கிளரொளி)(திருமாலிருஞ்சோலை மலையை வணங்குக)(ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி-திருமலைக்கு புறம்பான மலையை பிராபிக்கையே நல் விரகு என்கிறார்) 5
திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது
அற முயலாழிப் படையவன் கோயில்
மறுவில் வண் சுணை சூழ் மாலிரும்சோலை
புறமலை சாரப் போவது கிறியே –2-10-5
tiram utai,திறம் உடை - பலவகைப்பட்ட
valattal,வலத்தால் - வலிமையைக் கொண்டு
tivinai,தீவினை - பாவங்களை
perukkatu,பெருக்காது - மிகையாகச் செய்யாமல்
aram muyal ali pataiyavan koyil,அறம் முயல் ஆழி படையவன் கோயில் - ஆச்ரித ரக்ஷண தருமத்திலே முயல்கின்ற திருவாழியை ஆயுதமாகவுடைய பெருமானது கோயிலாய்.
maru il,மறு இல் - அழுக்கற்ற
van cuaina cul,வண் சுஐன சூழ் - வளமான களைகளால் சூழப்பட்ட
maliruncolai,மாலிருஞ்சோலை - திருமாலிருஞ் சோலையினுடைய
puram malai,புறம் மலை - பக்கத்திலுள்ள தொருமலையை
cara,சார - கிட்டுமாறு
povatu,போவது - போவதானது
kiri,கிறி - நல்ல உபாயம்.