Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 29 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
29ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 7
இருங்கை மத களிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக் கொண்டு ஓடு பரமன் தன்
நெருங்கு பவளமும் நேர் நாணும் முத்தும்
மருங்கும் இருந்தவா காணீரே வாணுதலீர் வந்து காணீரே–1-2-7
இரு கை மத களிறு,Eru kai matha kaliru - பெரிய துதிக்கையையுடைய மத்த கஜமான குவலயாபீடத்தை
ஈர்க்கின்றவனை,Eerkkindravanai - தன் வசமாக நடத்தா நின்றுள்ள பாகனை
பருங்கி,Parungi - கொன்று
பறித்துக்கொண்டு,Pariththukkondu - (யானையின் கொம்புகளை) முறித்துக் கொண்டு
ஓடு,Odu - (கம்ஸனிருக்குமிடத்தைத் தேடிக்கொண்டு) ஓடின
பரமன் தன்,Paraman than - பரமபுருஷனான கண்ணனுடைய
நெருங்கு,Nerungu - செறியக் கோத்த
பவளமும்,Pavalamum - பவள வடமும்
நேர் நாணும்,Ner naanum - அழகிய அரை நாணும்
முத்தும்,Muththum - முத்துவடமும் (இவற்றோடே சேர்ந்த)
மருங்கும் இருந்த ஆ,Marungum irundha aa - திருவரையும் இருந்தபடியை காணீர்!
வாள் நுதலீர் காணீர்!,Vaal nudhaleer kaanire - ஒளி பொருந்திய நெற்றியை யுடைய பெண்காள்! வந்து காணீர்!!