| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 290 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 5 | நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கள் சூடி நாரணன் போமிட மெல்லாம் சோதித்துழி தருகின்றாள் கேடு வேண்டு கின்றார் பலருளர் கேசவனோடு இவளை பாடு காவலிடுமி னென்றென்று பார் தடுமாறினதே–3-7-5 | நாடும்,Naadum - விசேஷ ஜ்ஞாநிகளும் ஊரும்,Oorum - ஸாமான்ய ஜ்ஞாநிகளும் அறிய,Ariya - அறியும்படியாக [பஹிரங்கமாக] போய்,Poi - வீட்டை விட்டுப் புறம்பே போய் நல்ல,Nalla - பசுமை மாறாத துழாய் அலங்கில்,Thuzhaai Alangil - திருத் துழாய் மாலையை சூடி,Soodi - (பகவத் ப்ரஸாதமென்று சொல்லிக் கொண்டு) தரித்துக் கொண்டு நாரணன் போம் இடம் எல்லாம்,Naaranan Pom Idam Ellaam - எம்பெருமான் போகிற இடம் முழுவதும் சோதித்து உழி தருகின்றாள்,Sodhiththu Uzhi Tharugindraal - தேடித் திரியா நின்றாள்; கேடு வேண்டுகின்றார்,Kaedu Vaendugindraar - இக்குடிக்குக் கேடு விளைய வெணுமென்று கோருமவர்கள் பலர் உளர்,Palar Ular - பல பேருண்டு; இவளை,Evalai - (ஆகையால்) எம்பெருமானைத் தேடித் திரிகிற இவளை கேசவனோடு,Kesavanodu - (அந்த) என்பெருமாளோடு (சேர்ப்பதற்காக அந்தப்புரத்திற் கொண்டாடுவோம்.) பாடு காவல் இடுமின்,Paadu Kaaval Idumin - அருகு காவலிடுங்கள் என்று என்னை,Endru Ennai - என்று இதையே பல காலும் சொல்லிக் கொண்டு பார்,Paar - பூமியிலுள்ள அநுகூல ஜநமானது தடுமாறினது,Thadumaarinadhu - மனங்குழம்பிச் செல்லா நின்றது |