| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 291 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | பட்டம் கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்தெடுத் தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் பொட்டப் போய்ப் புறப்பட்டு நின்று இவள் பூவைப்பூ வண்ணா வென்னும் பட்ட வார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே–3-7-6 | வட்டம் வார்,Vattam Vaar - சுருட்சியையும் நீட்சியையும் உடைய குழல்,Kuzhal - கூந்தலையுடைய மங்கைமீர்,Mangaimeer - மாதர்காள்!, பட்டம் கட்டி,Pattam Katti - (இம் மகளுக்கு) (நெற்றிக்கு அணியான)பட்டத்தைக் கட்டியும் பொன் தோடு,Pon Thodu - (காதுக்கு அணியான) பொன் தோட்டையும் பாடகமும் சிலம்பும்,Paadagamum Silambum - (கழலணியான) பாடகத்தையும் சிலம்பையும் பெய்து,Peithu - இட்டும் இவள் இட்டம் ஆக,Eval Ettam Aaga - இவளுடைய இஷ்டாநுஸாரமாக வளர்த்து எடுத்தேனுக்கு என்னோடு,Valarthu Eduthtenukku Ennodu - (இவளை) வளர்த்தெடுத்த என்னோடு இவள் இருக்கலுறாள்,Eval Erukkaluraal - இவள் இருக்க மாட்டேனென்கிறாள்; பொட்ட,Potta - (பின்னை ஏன் செய்கின்றாளெனில்;) திடீரென்று போய்,Poi - என்னைக் கைவிட்டுப் போய் புறப்பட்டு நின்று,Purappattu Nindru - (எல்லாருங்காணத் தெருவிலே) புறப்பட்டு நின்று பூவைப் பூ வண்ணா என்னும்,Poovaip Poo Vannaa Ennum - “காயாம்பூப்போன்ற மேனி நிறமுடைய கண்ணபிரானே!” என்று வாய் விட்டுக் கூப்பிடா நின்றாள்; இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - (அவ்வளவில் அவன் அருகுவாரா தொழியில்) இவள் மோஹத்தை யடைகின்றாள். |