| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 292 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன் பேதை இவள் கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல் கழிந்தான் மூழையாய் கேசவா வென்றும் கேடிலீ யென்றும் கிஞ்சுக வாய் மொழியாள் வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுறு கின்றாளே–3-7-7 | வாசம் வார்,Vaasam Vaar - வாஸனையையும் நீட்சியையுமுடைய குழல்,Kuzhal - கூந்தலையுடைய மங்கைமீர்,Mangaimeer - பெண்காள்! பேதையேன்,Pethaien - பேதைமையை யுடையளான என்னுடைய பேதை,Pethai - பெண் பிள்ளையும் பேசவும் தெரியாத பெண்மையின்,Pesavum Theriyatha Penmaiyin - (தன்னுடைய ஆசாரத்துக்கு ஒரு கெடுதி விளைந்ததாகப் பிறர்) ஒரு வார்த்தை சொன்னாலும் (அதைப்) பொறுக்க மாட்டாத ஸ்த்ரீத்வத்தை யுடையவளும் கிஞ்சுகம் வாய் மொழியாள்,Kinchukam Vaaimozhiyal - கிளியினுடைய வாய்மொழி போன்ற இனிய வாய் மொழியை யுடையவளுமான இவள்,Eval - இவள், நின்றார்கள் தம் எதிர்,Nindraargal Tham Ethir - மர்யாதை தவறாமல் இருக்குமவர்கள் முன்னே, கூசம் இன்றி,Koosam Inri - கூச்சமில்லாமல் கோல் கழிந்தான் மூழை ஆய்,Kol Kazhindhaan Moozhai Aay - கோலை விட்டு நீங்கின அகப்பை போல (என்னோடு உறவற்றவளாய்க் கொண்டு) கேசவனே! என்றும் கேசவா என்றும்,Kesavaa Endrum - கேசவனே! என்றும் கேடு இலீ என்றும்,Kedu Ilee Endrum - அழிவற்றவனே! [அச்யுதனே!] என்றும் வாய் விட்டுச் சொல்லி இவள் மாலுறுகின்றாள்,Eval Maalurugindraal - இவள் மோஹமடையா நின்றாள்; ஏ,A - இரக்கம் |