| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 2920 | திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 2 | எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை வானவர் வானவர் கோனொடும் சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து அந்தம் இல்புகழ்க் கார் எழில் அண்ணலே.–3-3-2 | வானவர், Vaanavar - நித்யஸூரிகள் வானவர் கோனொடும், Vaanavar koanodum - தங்களில் தலைவரான ஸேனை முதலியரோடு கூட சிந்து, Sindhu - தூவின பூ, Poo - புஷ்பங்கள் மகிழும், Magilum - செவ்விகுன்றாதிருக்கப்பெற்ற திருவேங்கடத்து, Thiruvengadathu - திருமலையில் அந்தம் இல் புகழ், Antham il pugazh - முடிவில்லாத புகழையுடையவனும் கார் எழில், Kaar ezil - நீலநிறத்தழகுடையனுமான அண்ணல், Annal - எம்பெருமான் எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை, Endhai thandhai thandhai thandhaikkum mundhai - எம்குலநாதன் |