திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 2922 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
2922திருவாய்மொழி || 3-3–ஒழிவில் 4
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4
பதவுரை Show / Hide
வானவர்க்கு, Vaanavarkku - நித்யஸூரிகளுக்கு
ஈசன், Eesan - தலைவன்
என்பன், Enban - என்று சொல்லுவேன்
என்றால், Endraal - இப்படிச் சொன்னால்
நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன் எண் கண், Neesanen niraivu ondrum ilen en kan - கடைகெட்டவனும் குணபூர்த்தியற்றவனுமான என் விஷயத்தில்
பாசம் வைத்த, Paasam vaitha - ஆசாபாசத்தை வைத்தருளினின்ற
பரம் சுடர்சோதிக்கு, Param sudarsothikku - நிரவதிக ஜ்யோதிர்மய தின் மங்கள விக்ரஹயுக்தனான
திருவேங்கடத்தானுக்கு, Thiruvengadathaanukku - திருவேங்கட முடையானுக்கு
அது தேசமோ, Athu dhesamo - நான் சொன்னது ஒரு பெருமையோ?