| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 293 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும் கூறை யுடுக்கும் அயர்க்கும் தங் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் மாறில் மா மணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே–3-7-8 | இவள்,Eval - இப் பெண் பிள்ளையானவள் காறை,Kaarai - பொற் காறையை பூணும்,Poonum - (தன் கழுத்தில்) பூணா நின்றாள்; கண்ணாடி காணும்,Kannadi Kaanum - (அக்காறையுங் கழுத்துமான அழகை) கண்ணாடிப் புறத்தில் காணா நின்றாள்; தன் கையில்,Than Kaiyil - தன் கையிலிருக்கிற வளை குலுங்கும்,Valai Kulungum - வளையல்களை குலுக்கா நின்றாள்; கூறை,Koora - புடவையை உடுக்கும்,Udukum - (ஒழுங்குபட) உடுத்துக் கொள்ளா நின்றாள்; (அவன் வரவுக்கு உடலாக இவ்வளவு அலங்கரித்துக் கொண்டவளவிலும் அவ்ன் வரக் காணாமையாலே,) அயர்க்கும்,Ayarkkum - தளர்ச்சி யடையா நின்றாள்; தன் கொவ்வை செம் வாய் திருத்தும்,Than Kovvai Sem Vaai Thiruthum - (மறுபடியுந் தெளிந்து இதற்கு மேலாக அலங்கரித்துக்கொள்ளத் தொடங்கி) கோவக் கனிபோலச் சிவந்துள்ள தன் அதரத்தைத் (தாம்பூல சர்வணாதிகளால்) ஒழுங்கு படுத்தா நின்றாள்; தேறித் தேறி நின்று,Theerith Theeri Nindru - மிகவுந் தெளிந்து நின்று ஆயிரம் பேர் தேவன் திறம் பிதற்றும்,Aayiram Per Devan Thiram Pitharuthum - ஸஹஸ்ர நாமப் பொருளான எம்பெருமானுடைய குணங்களை வாய் புலற்றா நின்றாள்; மாறு இல்,Maaru El - (அதன் பிறகு) ஒப்பற்றவனும் மா மணி வண்ணன் மேல்,Maa Mani Vannan Mel - நீலமணி போன்ற நிறத்தை யுடையனுமான(அக்) கண்ண பிரான் மேல் மாலுறுகின்றாள்,Maalurugindraal - மோஹியா நின்றாள் |