Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 294 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
294ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9
கைத்தலத் துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப் படுத்தும்
செய்த் தலை யெழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்து கொள்ள
மைத் தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே–3-7-9
கைத்தலத்து உள்ள மாடு அழிய,Kaithalathu Ulla Maadu Azhiy - கையிலுள்ள பணத்தைச் செலவழித்து
கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - (இவளுக்குச் செய்ய வேண்டிய) கல்யாணங்களைப் பண்ணி
இவளை,Evalai - (நமக்கடங்காத) இவளை
வைத்து வைத்துக் கொண்டு,Vaithu Vaithukkondu - நியமித்தும் காவலிட்டும் வைத்துக் கொண்டிருப்பதனால்
என்ன வாணிபம்,Enna Vaanipam - என்ன பயனுண்டாம்;
நம்மை வடுப்படுத்தும்,Nammai Vadupaduthum - (பயனுண்டாகாதொழிவது மன்றி) நமக்கு அவத்யத்தையும் உண்டாக்கும்;
செய்தலை எழு நாற்று போல்,Seithalai Ezu Naatru Pol - (என்று தாயாராகிய நான் சொல்ல, இதைக் கேட்ட பந்துக்கள்) ”வயலிலே வளர்ந்த நாற்றை அவ்வயலுக் குடையவன் தன் இஷ்டப்படி விநியோகம் கொள்வது போல,
அவள் செய்வன செய்து கொள்ள,Aval Seivana Seidhu Kolla - (இவளையும்) (ஸ்வாமியாகிய)அவன் தான் செய்ய நினைத்தவற்றை (தடையற)ச் செய்து கொள்ளும்படி
மை தட முகில் வண்ணன் பக்கல்,Mai Thada Mugil Vannan Pakkal - கறுத்துப் பெருத்த மேகம் போன்ற வடிவுடைய அக் கண்ண பிரானிடத்தில்
வளர,Valara - (இவள்) வாழும்படி
விடுமின்கள்,Vidumingal - (இவளைக் கொண்டு போய்) விட்டு விடுங்கள் " (என்கிறார்கள் என்று, தாய் தானே சொல்லுகிறபடி.)