Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 295 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
295ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம் மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளும் ஒன் றெண்ணுகின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினா ளென்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப் படுத்திடுமின் இவளை உலகளந்தா னிடைக்கே–3-7-10
பெருபெருத்த,Peruperutha - (இவளுக்கு) மிகவும் விசேஷமான
கண்ணாலங்கள் செய்து,Kannaalangal Seidhu - கல்யாண காரியங்களைச்செய்து
பேணி,Paeni - அன்பு பூண்டு
நம் இல்லத்துள்ளே,Nam Illathulle - நம் வீட்டுக்குள்ளேயே
இருந்துவான் எண்ணி நாம் இருக்க,Irundhuvaan Enni Naam Irukka - (இவளை) இருக்கச் செய்ததாக நாம் நினைத்திருக்க
இவளும்,Ivalum - இவளொ வென்றால்
ஒன்று எண்ணுகிறாள்,Ondru Ennugiraal - (நம் எண்ணத்திற்கு விபரீதமாக) மற்றொன்றை எண்ணுகிறாள்.
மருத்துவப்பதம் நீங்கினாலென்னும் வார்த்தைபடுவதன் முன்,Maruthuvapadham Neenginaalennum Vaarthaipaduvathan Mun - (என்று தாயாகிய நான் சொல்ல இதைக் கேட்ட பந்துக்கள்) வயித்தியன் தான் செய்யும் மருந்தில் பதம் பார்த்து செய்யாவிடில்
அது கை தவறுவது போல இவள் பதம் பார்த்து நாம் செய்யாமையாலே இவள் கைகழிந்தாளேன்கிற அபவாதம் பிறப்பதற்கு முன்.

இவளை,Ivalai - இவளை
உலகு அளந்தானிடைக்கே,Ulaku Alandhaanidaikke - உலகளந்தருளின கண்ணபிரானிடத்திலேயே(கொண்டு போய்)
ஒருபடுத்திடுமின்,Orupaduthidumin - சேர்த்துவிடுங்கள் (என்று கூறியதைத் தாய் கூறுகின்றாள்)