Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 296 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
296ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11
ஞால முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாரா யணனுக்கு இவள்
மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை
கோல மார் பொழில் சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே-3-7-11
இவள்,Eval - இப்பெண்பிள்ளை யானவள்
ஞாலம் முற்றும் உண்டு,Gnaalam Mutrum Undu - எல்லா வுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி
ஆல் இலை துயில்,Aal Ilai Thuyil - ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளின
நாராயணனுக்கு,Naarayananukku - எம்பெருமான் விஷயத்தில்
மால் அது ஆகி,Maal Athu Aagi - மோஹத்தை யுடையளாய்
மகிழ்ந்தனள் என்று,Magizhndhanal Endru - (அவனை அணைக்க வேண்டு மென்ற மநோ ரதத்தினால்) மனமுகந்தாள்” என்று
தாய் உரை செய்ததனை,Thaai Urai Seidhaththai - தாய் சொல்லியதை
கோலம் ஆர்,Kolam Aar - அழகு நிறைந்த
பொழில் சூழ்,Pozhil Soozh - சோலைகளாலே சூழப்பட்ட
புதுவையர் கோன்,Puthuvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்க்குத் தலைவரான
விட்டுச் சித்தன்,Vittuch Siththan - பெரியாழ்வார்
சொன்ன,Sonnna - அருளிச் செய்த
மாலை,Maalai - சொல் மாலையாகிய
பத்தும்,Paththum - இப்பத்துப் பாட்டையும்
வல்லவர்கட்கு,Vallavarkatku - ஓத வல்லவர்களுக்கு
வரு துயர் இல்லை,Varu Thuyar Illai - வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை.