| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 296 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஏழாம் திருமொழி - ஐயபுழுதி (திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு நற்றாய் இரங்கும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 11 | ஞால முற்றும் உண்டு ஆலிலைத் துயில் நாரா யணனுக்கு இவள் மால தாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனை கோல மார் பொழில் சூழ் புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே-3-7-11 | இவள்,Eval - இப்பெண்பிள்ளை யானவள் ஞாலம் முற்றும் உண்டு,Gnaalam Mutrum Undu - எல்லா வுலகங்களையும் திருவயிற்றிலே வைத்து நோக்கி ஆல் இலை துயில்,Aal Ilai Thuyil - ஒரு ஆலந்தளிரிலே கண் வளர்ந்தருளின நாராயணனுக்கு,Naarayananukku - எம்பெருமான் விஷயத்தில் மால் அது ஆகி,Maal Athu Aagi - மோஹத்தை யுடையளாய் மகிழ்ந்தனள் என்று,Magizhndhanal Endru - (அவனை அணைக்க வேண்டு மென்ற மநோ ரதத்தினால்) மனமுகந்தாள்” என்று தாய் உரை செய்ததனை,Thaai Urai Seidhaththai - தாய் சொல்லியதை கோலம் ஆர்,Kolam Aar - அழகு நிறைந்த பொழில் சூழ்,Pozhil Soozh - சோலைகளாலே சூழப்பட்ட புதுவையர் கோன்,Puthuvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ளவர்க்குத் தலைவரான விட்டுச் சித்தன்,Vittuch Siththan - பெரியாழ்வார் சொன்ன,Sonnna - அருளிச் செய்த மாலை,Maalai - சொல் மாலையாகிய பத்தும்,Paththum - இப்பத்துப் பாட்டையும் வல்லவர்கட்கு,Vallavarkatku - ஓத வல்லவர்களுக்கு வரு துயர் இல்லை,Varu Thuyar Illai - வரக்கூடிய துன்பம் ஒன்றுமில்லை. |