| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 297 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 1 | நல்லதோர் தாமரைப் பொய்கை நாண் மலர் மேல் பனி சோர அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தா லொத்த தாலோ இல்லம் வெறியோடிற் றாலோ என் மகளை எங்கும் காணேன் மல்லரை யட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ–3-8-1 | நல்லது ஓர் தாமரைப் பொய்கை,Nalladhu Or Thaamaraip Poigai - அழகிய ஒரு தாமரைக் குளமானது (தன்னிடத்துள்ள) நாள் மலர் மேல்,Naal Malar Mel - அப்போதலர்ந்த பூவின் மேல் பனி சோர,Pani Soora - பனி பெய்ததனால் அல்லியும் தாதும்,Alliyum Thaadhum - (அம் மலரினது) உள்ளிதழும் புறவிதழும் உதிரப் பெற்று அழகு அழிந்தால் ஒத்தது,Azhagu Azhindhaal Oththathu - அழகு அழியப் பெறுவது போல இல்லம்,Ellam - (இவ்)வீடானது வெறி ஓடிற்று,Veri Odidritru - வெறிச்சென்றிருக்கிறது; என் மகளை,En Magalai - என் பெண் பிள்ளையை எங்கும்,Engum - ஓரிடத்திலும் காணேன்,Kaanen - காண்கின்றிலேன்; மல்லரை அட்டவன் பின் போய்,Mallarai Attavan Pin Poi - மல்லர்களை அழித்த கண்ணபிரான் பின்னே போய் மதுரைப் புறம்,Mathuraip Puram - மதுரைக்கு அருகிலுள்ள திருவாய்ப்பாடியில் புக்கார்கொல் ஓ,Pukkaar Kol O - புகுந்தாளாவள் கொல்?. |