| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 298 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 2 | ஒன்றும் அறிவொன்றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள் கன்று கால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு ஓரேச்சுக் சொலாயிடுங் கொலோ–3-8-2 | ஒன்றும் அறிவு ஒன்று இல்லாத,Ondrum Arivu Ondru Illaatha - பொருந்திய ஞானம் சிறிதுமில்லாதவர்களும் உரு அறை,Uru Arai - ரூப ஹீநர்களுமான கோபாலர் தங்கள்,Gopaalar Thangal - இடையரானவர்கள் கன்று கால் மாறும் ஆ போலே,Kanru Kaal Maarum Aa Pole - கண்ணுக்கழகிய கன்றுகளை உடையவர்களறியாமல் களவிலே கொண்டு போவது போல, கன்னி இருந்தாளை,Kanni Irundhaalai - கன்னிகைப் பருவத்தளாய் எனக்கடங்கி யிருந்த பெண்ணை நன்றும் கிறி செய்து,Nandrum Kiri Seidhu - நல்ல உபாயங்களைப் பண்ணி கொண்டு போனான்,Kondu Ponnaan - (தெரியாமல்) அபஹரித்துக் கொண்டு போன நாராயணன்,Naaraayanan - கண்ண பிரான் செய்த தீமை,Seidha Theemai - செய்த தீம்பானது எமர்கள் குடிக்கு,Emargal Kudikku - எங்கள் குலத்துக்கு என்றும்,Endrum - சாச்வதமான ஓர் ஏச்சு ஆயிடும் கொல் ஓ,Or Echu Aayidum Kol O - ஒரு பழிப்பாகத் தலைக் கட்டுமோ?. |