| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 302 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 6 | வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என் மகளை கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடி வாழுங் கொலோ நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ–3-8-6 | சாடி இற பாய்ந்த பெருமான் ,Saadi Ira Paayndha Perumaan - சகடாஸுரனை முறித்து தள்ளின திருவடிகளை யுடைய கண்ணபிரான், வேடர்,Vedhar - வேடர்களையும் மறக் குலம் போலே,Marak Kulam Pole - மறவர் என்கிற நீச ஜாதியரையும் போலே என் மகளை,En Magalai - (ஸத் குலத்திற் பிறந்த) என் பெண் பிள்ளையை வேண்டிற்று செய்து,Vendritru Seidhu - தன் இஷ்டப்படி செய்து கூடிய கூட்டமே ஆகக் கொண்டு,Koodiya Koottaame Aaga Kondu - தம்பதிகளாகிய இருவரும் நெஞ்சு பொருந்திக் கூடின கூடுதலையே விவாஹமாஹக் கொண்டு குடி வாழும் கொல் ஓ,Kudi Vaalum Kol O - குடிவாழ்க்கை வாழ்வனோ? நாடும்,Naadum - (அன்றி) ஸாமாந்ய ஜனங்களும் நகரும்,Nagarum - விசேஷஜ்ஞ ஜனங்களும் அறிய,Ariya - அறியும்படி (பஹிரங்கமாக) நல்லது ஓர் கண்ணாலம் செய்து,Nalladhu Or Kannaalam Seidhu - விலக்ஷணமானதொரு விவாஹோத்ஸவத்தை (விதிப்படி) செய்து தக்க ஆ,Thakka Aa - (ஜாதி தர்மத்துக்குத்) தகுதியாக கைப்பற்றும் கொல் ஓ,Kaippatrum Kol O - பாணி க்ரஹணம் பண்ணுவனோ? |