| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 303 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 7 | அண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளை பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொலோ–3-8-7 | அண்டத்து அமரர்,Andhathu Amarar - பரம பதத்திலுள்ள நித்ய ஸூரிகளுக்கு பெருமான்,Perumaan - தலைவனும் ஆழியான்,Aazhiyaan - திருவாழி யாழ்வானை யுடையனுமான கண்ணபிரான் என் மகளை,En Magalai - என் பெண் பிள்ளையை இன்று,Endru - இப்போது பண்டம் பழிப்புக்கள் சொல்லி,Pandham Pazhippukal Solli - பதார்த்தங்களுக்குக் குறை சொல்வது போல் (இவளது) ரூப குணங்களிற் சில குறைகளைச் சொல்லி பரிசு அற,Parisu Ara - வரிசை கெடும்படி ஆண்டிடும் கொல் ஓ,Aandidum Kol O - ஆளுவனோ?(அன்றி,) பண்டை மணாட்டிமார் முன்னே,Pandai Manaattimaar Munne - முன்பே பட்டங்கட்டித் தனக்குத் தேவியாயிருப்பவர்களின் முன்னே கொண்டு,Kondu - இவளைக் கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து,Kudi Vaalvazh Vaalndhu - (தனது) க்ருஹ க்ருத்யமெல்லாம் நடத்தி கோவலர் பட்டம் கழித்து,Kovalar Pattam Kazhiththu - “இவள் இடைகுலத்துக்குத் தலைவி” என்று (தன் மனைவியானமை தோற்றப்) பட்டங்கட்டி, பாதுகாவல் வைக்கும் கொல் ஓ,Paadhukaaval Vaikkum Kol O - அந்தப்புறக் காவலிலே வைப்பனோ? |