Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 304 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
304ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8
குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடை யொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன்
இடை யிருபாலும் வணங்க இளைத்திளைத்து என் மகள் ஏங்கி
கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பேறிடுங் கொலோ–3-8-8
நங்காய்,Nangai - பூரணையாயிருப்பவளே;
நந்தகோபான மகன் கண்ணன்,Nandagopaana Magan Kannan - நந்தகோபருடைய பிள்ளையாகிய கண்ணன்
குடியில் பிறந்தவர் செய்யும் குணம்,Kudiyil Pirandhavar Seyyum Gunam - உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் (குல மர்யாதைக்குத் தக்கபடி) செய்யும் குணங்களில்
ஒன்றும்,Ondrum - ஒருவகைக் குணத்தையும்
செய்திலன்,Seydhilan - செய்தானில்லை;
நடை,Nadai - உலகத்துக்குப் பொதுவான நடத்தைகளிலும்
ஒன்றும் செய்திலன்;,Ondrum Seydhilan - ஒன்றும் செய்திலன்;
அந்தோ!,Andho - அஹஹ!
என் மகள்,En Magal - என் மகளானவள்
இடை,Edai - (தயிர் கடையும் போது) இடுப்பானது
இரு பாலும்,Eru Paalum - இரு பக்கத்திலும்
வணங்க,Vananga - துவண்டு போவதனால்
ஏங்கி,Eangi - மூச்சுப்பிடித்துத் கடைய மாட்டாள்) நடுநடுவே எக்கமுற்று
இளைத்து இளைத்து,Elaiththu EIaiththu - மிகவும் இளைத்து
கடை கயிறே,Kadaikayire - கடைகிற கயிற்றையே
பற்றி வாங்கி,Patri Vaangi - பிடித்து வலித்திழுப்பதனால்
கை தழும்ப ஏறிடும் கொல் ஓ,Kai Thazhumpa Eraidum Kol O - (தனது ஸுகுமாரமான) கைகள் தழும்பேறப் பெறுமோ?.