| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 304 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 8 | குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ நடை யொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் இடை யிருபாலும் வணங்க இளைத்திளைத்து என் மகள் ஏங்கி கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பேறிடுங் கொலோ–3-8-8 | நங்காய்,Nangai - பூரணையாயிருப்பவளே; நந்தகோபான மகன் கண்ணன்,Nandagopaana Magan Kannan - நந்தகோபருடைய பிள்ளையாகிய கண்ணன் குடியில் பிறந்தவர் செய்யும் குணம்,Kudiyil Pirandhavar Seyyum Gunam - உயர்ந்த குலத்தில் பிறந்தவர்கள் (குல மர்யாதைக்குத் தக்கபடி) செய்யும் குணங்களில் ஒன்றும்,Ondrum - ஒருவகைக் குணத்தையும் செய்திலன்,Seydhilan - செய்தானில்லை; நடை,Nadai - உலகத்துக்குப் பொதுவான நடத்தைகளிலும் ஒன்றும் செய்திலன்;,Ondrum Seydhilan - ஒன்றும் செய்திலன்; அந்தோ!,Andho - அஹஹ! என் மகள்,En Magal - என் மகளானவள் இடை,Edai - (தயிர் கடையும் போது) இடுப்பானது இரு பாலும்,Eru Paalum - இரு பக்கத்திலும் வணங்க,Vananga - துவண்டு போவதனால் ஏங்கி,Eangi - மூச்சுப்பிடித்துத் கடைய மாட்டாள்) நடுநடுவே எக்கமுற்று இளைத்து இளைத்து,Elaiththu EIaiththu - மிகவும் இளைத்து கடை கயிறே,Kadaikayire - கடைகிற கயிற்றையே பற்றி வாங்கி,Patri Vaangi - பிடித்து வலித்திழுப்பதனால் கை தழும்ப ஏறிடும் கொல் ஓ,Kai Thazhumpa Eraidum Kol O - (தனது ஸுகுமாரமான) கைகள் தழும்பேறப் பெறுமோ?. |