| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 305 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | வெண்ணிறத் தோய் தயிர் தன்னை வெள் வரைப்பின் முன் எழுந்து கண்ணுறங்காதே யிருந்து கடையவும் தான் வல்லள் கொலோ ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளை பண்ணறையாப் பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ–3-8-9 | என் மகள் தான்,En Magal Thaan - என் மகளானவள் வெளிவரைப் பின் முன் எழுந்து,Velivarai Pin Mun Ezhandhu - கிழக்கு வெளுப்பதற்கு முன்பாக எழுந்திருந்து கண் உறங்காதே இருந்து,Kan Urangaadhe Irundhu - கண் விழித்துக்கொண்டிருந்து வெள் நிறம் தோய் தயிர் தன்னை,Vel Niram Thoy Thayir Thannai - வெளுத்தை நிறுத்தையுடைத்தாய் தோய்ந்த தயிரை கடையவும் வல்லன் கொல் ஓ,Kadaiyavum Vallan Kol O - கடையும் படியான சக்தியைத் தான் உடையவனோ? ஒண் நிறம் செம் தாமரை கண்,On Niram Sem Thamarai Kan - அழகிய நிறத்தையுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடையவனும் உலகு அளந்தான்,Ulagu Alandhaan - (திரிலிக்ரமாவதாரத்தில்) உலகளந்தருளினவனுமான கண்ணபிரான் என் மகளை,En Magalai - என் பெண்ணை பண் அறையாய் கொண்டு,Pan Arayai Kondu - தர்ம ஹாநியாக இழி தொழில்களைச் செய்வித்துக் கொண்டு பரிசு அற,Parisu Ara - (அவளுடைய) பெருமை குலையும்படி ஆண்டிடும் கொல் ஓ,Aandidum Kol O - ஆளுவனோ? |