| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3051 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (எல்லாவுலகங்களையும் நிர்வஹிக்க வல்லவனான எம்பெருமாளை ஏத்தப்பெற்ற வெனக்கு ஒரு காலத்திலும் ஒரு குறையுமில்லை யென்கிறார்.) 1 | வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர் ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப் போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள் ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1 | வீற்றிருந்து,Veetrirundhu - (பரமபதத்திலே) எழுந்தருளியிருந்து ஏழ் உலகும்,EzhUlagum - எவ்வுலகங்களிலும் தனி கோல் செல்ல வீவு இல் சீர்,Thani kol chella veevu il seer - அத்விதீயமான செங்கோல் நடக்கும்படி ஆற்றல் மிக்கு ஆளும்,Aatral mikku aalum - சாந்தியுடனே ஆள்கின்ற அம்மானை,Ammaanai - ஸ்வாமியாய் வெம் மா பிளந்தான் தன்னை,Vem maa pilandhaan thannai - கொடிய (கேசி என்னும் அசுரனான) குதிரையை வாய்பிளந்து கொன்ற பெருமானை போற்றி என்றே,Pottri endrae - போற்றி போற்றி என்று வாழ்த்திக்கொண்டே கைகள் ஆர தொழுது,Kaigal aara thozhudhu - கைகளின் விடாய் தீரும்படி அஞ்சலி பண்ணி சொல் மாலைகள்,Sol maalaihal - சொற்களாகிற மாலைகளை ஏற்ற,Aetra - (அவன் உகக்கும்படி) ஸமர்ப்பிக்கைக்கு நோற்றேற்கு,Notraeku - புண்ணியஞ் செய்துள்ள எனக்கு இனி,Ini - இனிமேல் எழுமையும்,Ezhumaiyum - ஏழேபடியான ஜன்மங்களிலும் என்ன குறை,Enna kurai - என்ன குறையுண்டாம்! |