Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3051 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3051திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (எல்லாவுலகங்களையும் நிர்வஹிக்க வல்லவனான எம்பெருமாளை ஏத்தப்பெற்ற வெனக்கு ஒரு காலத்திலும் ஒரு குறையுமில்லை யென்கிறார்.) 1
வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1
வீற்றிருந்து,Veetrirundhu - (பரமபதத்திலே) எழுந்தருளியிருந்து
ஏழ் உலகும்,EzhUlagum - எவ்வுலகங்களிலும்
தனி கோல் செல்ல வீவு இல் சீர்,Thani kol chella veevu il seer - அத்விதீயமான செங்கோல் நடக்கும்படி
ஆற்றல் மிக்கு ஆளும்,Aatral mikku aalum - சாந்தியுடனே ஆள்கின்ற
அம்மானை,Ammaanai - ஸ்வாமியாய்
வெம் மா பிளந்தான் தன்னை,Vem maa pilandhaan thannai - கொடிய (கேசி என்னும் அசுரனான) குதிரையை வாய்பிளந்து கொன்ற பெருமானை
போற்றி என்றே,Pottri endrae - போற்றி போற்றி என்று வாழ்த்திக்கொண்டே
கைகள் ஆர தொழுது,Kaigal aara thozhudhu - கைகளின் விடாய் தீரும்படி அஞ்சலி பண்ணி
சொல் மாலைகள்,Sol maalaihal - சொற்களாகிற மாலைகளை
ஏற்ற,Aetra - (அவன் உகக்கும்படி) ஸமர்ப்பிக்கைக்கு
நோற்றேற்கு,Notraeku - புண்ணியஞ் செய்துள்ள எனக்கு
இனி,Ini - இனிமேல்
எழுமையும்,Ezhumaiyum - ஏழேபடியான ஜன்மங்களிலும்
என்ன குறை,Enna kurai - என்ன குறையுண்டாம்!