| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3057 | திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (கீழ்ப்பாட்டில் “அரியதுண்டோ வெனக்கு இன்று தொட்டு மினியென்றுமே” என்று செருக்குத் தோற்றப் பேசினார். இத்தகைய செருக்கு எத்தாலே வந்ததென்ன, எம்பெருமானருளாலே வந்த தென்கிறாரிப் பாட்டில்.) 7 | என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக் குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள் நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7 | என்றும்,Endrum - பரத்வம் முதலான ஸர்வாவஸ்தைகளிலும் ஒன்று ஆகி,Ondru aagi - ஒரேப்ரகாரமுடையனாய்க் கொண்டு ஒத்தாரும் மிக்கார்களும்,Ottaaru mikkarkalum - ஸமராயும் அதிகராயும் இருப்பார் தன்தனக்கு,Tandanakku - தனக்கு இன்றி நின்றானை,Indri nindraanai - இல்லாமலிருப்பவனாய் எல்லா உலகும் உடையான் தன்னை,Ella ulagum udaiaan thannai - எல்லாவுலகத்தையும் தனக்கு •••ஷமாகவுடையனாய் மழை,Mazhai - மழையை குன்றம் என்றால்,Kunram endraal - மலை ஒன்றினாலே காத்த பிரானை,Kaatha piranai - தடுத்த மஹோபகாரகனான வனைக்குறித்து சொல் மாலைகள்,Sol maaligal - சொல்மயமான மாலைகளை நன்று சூட்டும் விதி,Nanru soottum vidhi - அவன் ஆதரித்துச் சூடும்படி சூட்டுகைக்குற்ற பாக்கியத்தை எய்தினம்,Yeidinam - கிட்டப்பெற்றோம்: (ஆதலால்) நமக்கு என்னகுறை,Namakku ennagurai - நமக்கு ஒருகுறை யுண்டோ? |