Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3057 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3057திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (கீழ்ப்பாட்டில் “அரியதுண்டோ வெனக்கு இன்று தொட்டு மினியென்றுமே” என்று செருக்குத் தோற்றப் பேசினார். இத்தகைய செருக்கு எத்தாலே வந்ததென்ன, எம்பெருமானருளாலே வந்த தென்கிறாரிப் பாட்டில்.) 7
என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7
என்றும்,Endrum - பரத்வம் முதலான ஸர்வாவஸ்தைகளிலும்
ஒன்று ஆகி,Ondru aagi - ஒரேப்ரகாரமுடையனாய்க் கொண்டு
ஒத்தாரும் மிக்கார்களும்,Ottaaru mikkarkalum - ஸமராயும் அதிகராயும் இருப்பார்
தன்தனக்கு,Tandanakku - தனக்கு
இன்றி நின்றானை,Indri nindraanai - இல்லாமலிருப்பவனாய்
எல்லா உலகும் உடையான் தன்னை,Ella ulagum udaiaan thannai - எல்லாவுலகத்தையும் தனக்கு •••ஷமாகவுடையனாய்
மழை,Mazhai - மழையை
குன்றம் என்றால்,Kunram endraal - மலை ஒன்றினாலே
காத்த பிரானை,Kaatha piranai - தடுத்த மஹோபகாரகனான வனைக்குறித்து
சொல் மாலைகள்,Sol maaligal - சொல்மயமான மாலைகளை
நன்று சூட்டும் விதி,Nanru soottum vidhi - அவன் ஆதரித்துச் சூடும்படி சூட்டுகைக்குற்ற பாக்கியத்தை
எய்தினம்,Yeidinam - கிட்டப்பெற்றோம்: (ஆதலால்)
நமக்கு என்னகுறை,Namakku ennagurai - நமக்கு ஒருகுறை யுண்டோ?