Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 306 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
306ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை) (தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய் பலபடி வருந்திக்கூறும் பாசுரம்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10
மாயவன் பின் வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத் தண் புதுவைப் பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணற் காளாரே–3-8-10
வழி இடை,Valee Idai - போகிற வழியிலே
மாற்றங்கள் கேட்டு,Maattrangal Kettu - (அபூர்வ வஸ்துக்களைக் கண்டால் இவை என்?” என்று அவ் விஷயமாக) வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு
மாயவன் பின் வழி சென்று,Maayavan Pin Vali Sendru - கண்ணபிரான் பின்னே போய்
ஆயர்கள் சேரியிலும் புக்கு,Aayargal Seriyilum Pukku - திருவாய்ப்பாடியிலும் சென்று புகுந்த பின்பு
அங்குத்தை மாற்றமும் எல்லாம்,Anguththai Maatramum Ellaam - அங்குண்டாகும் செயல்கள் சொலவுகள் முதலிய எல்லாவற்றையுங் குறித்து
தாய் அவள்,Thaai Aval - தாயானவள்
சொல்லிய,Solliya - சொன்ன
சொல்லை,Sollai - வார்த்தைகளை
தன் புதுவைபட்டன் சொன்ன,Than Pudhuvaipattan Sonnan - குளிர் தன்மையை யுடைய ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த பெரியாழ்வார் அருளிச் செய்தவையாகிய
தூய,Thooya - பழிப்பற்ற
தமிழ் பத்தும்,Tamil Paththum - தமிழ் பாட்டுக்கள் பத்தையும்
வல்லார்,Vallaar - ஓத வல்லவர்கள்
தூ மணிவண்ணனுக்கு,Thoo Manivannanukku - அழகிய மணி போன்ற நிறத்தையுடைய கண்ணபிரானுக்கு
ஆளர்,Aalar - ஆட்செய்யப் பெறுவர்.