Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3060 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3060திருவாய்மொழி || (4-5–வீற்றிருந் தேழுலகும் ) (எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்) (தாம் பாடுகிற கவிகளின் இனிமையைத் தாம் அநுஸந்தித்து, எம்பெருமானுக்கு நல்லராயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைக் கேட்டால் எங்ஙனே இனியராகிறாரோ வென்கிறார்.) 10
உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10
உண்டும்,Undum - (ப்ரளயத்திலே) உண்டு வயிற்றிலே வைத்தும்
உமிழ்ந்தும்,Umizhndhum - பிறகு வெளி நாடுகாண உமிழ்ந்தும்
கடந்தும்,Kadandhum - (மற்றொருகால்) அளந்து காற்கீழேயிட்டும்
இடந்தும்,Idandhum - (அவாந்தர ப்ரளப்த்திலே வராஹ ரூபியாய்) இடந்தெடுத்தும்
கிடந்தும்;,Kidandhum; - (ஸ்ரீராமாவதாரத்திலே) கடற்கரையிலே கிடந்தும்
நின்றும்,Ninrum - இராவணவதத்தின் பிறகு தேவர்கட்குக் காட்சி கொடுத்துநின்றும்
கொண்ட கோலத்தொடு,Kondha kola thodu - மீண்டுவந்து பட்டாபிஷேகம் பண்ணின கோலத்தொடே
வீற்றிருந்தும்,Veevirundhum - எழுந்தருளியிருந்தும்
மணம் கூடியும்,Manam koodiyum - பதினோராயிரம் ஆண்டு பூமியை ரக்ஷிக்கையாலே பூமிப்பிராட்டி (விரும்பியணைக்க அவளோடே ஸம்ச்லேஷித்தும்)
கண்ட ஆற்றால்,Kanda aatral - இப்படி ப்ரத்யக்ஷ்மாகக் கண்ட சேடிதங்களால்
உலகு தனதே என,Ulagu thanadhe ena - உலகம் தனக்கே பேஷம் என்று நாடாகச்சொல்லும்படி
நின்றான் தன்னை,Ninran thanai - நின்ற ஸர்வேச்வரன் விஷயத்தில்
வண் தமிழ்,Van Tamil - அழகிய தமிழ்ப்பிரபந்தத்தை
நூற்க,Noorka - தொடுக்கைக்கு
நோற்றேன்,Noottren - புண்ணியம் பண்ணினேன்: (இத்திவ்யப்ரந்தமானது)
அடியார்க்கு,Adiyarku - எம்பெருமானடியார்கட்கு
ளஇன்பம் மாரி,Inbam maari - ஆனந்த மழைபொழியும் மேகமாயிரா நின்றது.