| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 307 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 1 | என்னாதன் தேவிக்கு அன்று இன்பப் பூ ஈயாதாள் தன் நாதன் காணவே தண் பூ மரத்தினை வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட என்னாதன் வன்மையைப் பாடிப் பற எம்பிரான் வன்மையைப் பாடிப் பற–3-9-1 | என் நாதன்,En Naathan - எனக்கு ஸ்வாமியான கண்ண பிரானுடைய தேவிக்கு,Devikku - தேவியான ஸத்ய பாமைப் பிராட்டிக்கு இன்பம் பூ,Enbam Poo - மனோ ஹரமான கற்பகப் பூவை அன்று,Andru - (அவன் விரும்பின) அக் காலத்தில் ஈயாதாள் தன்,Eeyaadhaal Than - கொடாத இந்திராணியினுடைய நாதன்,Naathan - கணவனான தேவேந்திரன் காணவே,Kaanave - கண்டு கொண்டு நிற்கும் போதே தண் பூ மரத்தினை,Than Poo Maraththai - குளிர்ந்த பூக்களை யுடைய கல்ப வ்ருஷத்தை வல் நாதம் புள்ளால்,Val Naatham Pullaal - வலிமை யுடைய ஸாமவேத ஸ்வரூபியான பெரிய திருவடியாலே வலிய,Valiya - பலாத்காரமாக பறித்து,Pariththu - பிடுங்கிக் கொண்டு வந்து இட்ட,Etta - (அதனை ஸத்யபாமையின் வீட்டு முற்றத்தில்) நட்டருளின என் நாதன்,En Naathan - என் ஸ்வாமியான கண்ண பிரானுடைய வன்மையை,Vanmaiyai - வலிவை பாடி,Paadi - பாடிக் கொண்டு பற,Para - உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற |