திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 308 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
308பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 2
என் வில் வலி கண்டு போவென்று எதிர் வந்தான் தன் வில்லி னோடும் தவத்தை எதிர் வாங்கி முன் வில் வலித்து முது பெண்ணுயிருண்டான் தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற தாசரதி தன்மையைப் பாடிப் பற–3-9-2
பதவுரை Show / Hide
எதிர் வந்தான் தன்,Ethir Vandhaan Than - எதிர்த்து வந்த பரசு ராமனுடைய
வில்லினோடு,Villinodu - வில்லையும்
தவத்தையும்,Thavaththaiyum - தபஸ்ஸையும்
எதிர்,Ethir - அவன் கண்ணெதிரில்
வாங்கி,Vaangi - அழித்தருளினவனும்
முன்,Mun - இதற்கு முன்னே
வில் வலித்து,Vil valiththu - வில்லை வளைத்து
முது பெண்,Muthu pen - (பர ஹிம்சையில்) பழகிக் கிடந்த தாடமையினுடைய
உயிர்,Uyir - உயிரை
உண்டான் ,Undaan - உண்டான்
வில்லின்,Villin - (தன் முடித்தருளினவனுமான இராமபிரானுடைய) வில்லினது
வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற
தாசரதி,Dasarathi - சக்ரவர்த்தித் திருமகனுடைய
தன்மையை,Thanmaiyai - ஸ்வபாவத்தை பாடிப் பற