| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 309 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 3 | உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு விருப்புற் றங்கேக விரைந்து எதிர் வந்து செருக்குற்றான் வீரம் சிதைய தலையைச் சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற தேவகி சிங்கத்தைப் பாடிப்பற–3-9-3 | உருப்பிணி நங்கையை,Uruppini nangaiyai - ருக்மிணிப் பிராட்டியை தேரின்,Therin - (தனது) தேரின் மேல் ஏற்றிக் கொண்டு,Eatrik kondu - ஏற்றிக் கொண்டு விருப்புற்று,Virupputru - ஆசையுடனே ஏக,Eka - (கண்ணன்) எழுந்தருளப்புக, அங்கு,Angu - அவ்வளவில் விரைந்து,Viraindhu - மிக்க வேகங் கொண்டு எதிர் வந்து,Ethir vandu - (போர் செய்வதாக) எதிர்தது செருக்கு உற்றான்,Serukku utraan - கர்வப்பட்ட ருக்மனுடைய வீரம் சிதைய,Veeram sithaiya - வீரத் தனம் கெடும் படியாக தலையை,Thalaiyai - (அவனது) தலையை சிரைத்திட்டான்,Siraiththittaan - (அம்பாலே) சிரைத்து விட்ட கண்ணனுடைய வன்மையை,Vanmaiyai - வலிவை பாடிப் பற தேவகி சிங்கத்தை,Devaki singaththai - தேவகியின் வயிற்றிற் பிறந்த ஸிம்ஹ குட்டி போன்றவனை பாடிப்பற,Paadippara - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற |