Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 31 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
31ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 9
அதிரும் கடல் நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலை யூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந் தாம்பா லார்த்த
உதரம் இருந்தவா காணீரே ஒளி வளை யீர் வந்து காணீரே–1-2-9
அதிரும்,Athirum - கோஷிக்கின்ற
கடல்நிறம்,Kadalniram - கடலினது நிறம்போன்ற
வண்ணனை,Vannanai - நிறத்தை யுடைய கண்ணனுக்கு
ஆய்ச்சி,Aaychchi - யசோதை யானவள்
மதுரம் முலை ஊட்டி,Madhuram mulai ootti - இனிய முலைப் பாலை ஊட்டி,
வஞ்சித்து வைத்து,Vanchiththu vaiththu - (மேல், தான் இவனைக் கட்டப் போகிறதை இவனறிய வொண்ணாதபடி) ஏமாத்தி
பதறப் படாமே,Patharappadaame - தன் எண்ணம் தப்பாதபடி
பழ தாம்பால்,Pazha thaambaal - பழகின கயிற்றாலே
ஆர்த்த,Aartha - கட்டி வைத்த
உதரம் இருந்த ஆ காணீரே,Utharam irundha aa kaanire - வயிறு இருந்தபடியை காணீர்!
ஒளி வளையீர் வந்து காணீரே,Oli valaiyeer vandhu kaanire - ஒளி மிக்க வளையை யுடைய பெண்காள்! வந்து காணீர்!!