| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 312 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 6 | முடியொன்றி மூவுல கங்களும் ஆண்டு உன் அடியேற் கருளென்று அவன் பின் தொடர்ந்த படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று அடி நிலை யீந்தானைப் பாடிப் பற அயோத்தியர் கோமானைப் பாடிப்பற–3-9-6 | முடி ஒன்றி,Mudi Ondri - திருமுடி சூடி மூ உலகங்களும்,Moo Ulagangalum - பூமி, சுவர்க்கம், பாதாளம் என்ற மூன்று லோகங்களையும் ஆண்டு,Aandu - பரி பாலித்துக் கொண்டு உன் அடியேற்கு அருள் என்று,Un Adiyerku Arul Endru - தேவருடைய தாஸனான எனக்கு க்ருபை பண்ண வேணும் என்று வேண்டிக் கொண்டு அவன் பின் தொடர்ந்த,Avan Pin Thodarndha - பெருமான் பின்னே தொடர்ந்து வந்த படி இல் குணத்து பரதன் நம்பிக்கு,Padi Il Gunathu Barathan Nambikku - ஒப்பற்ற குணங்களை யுடையனான ஸ்ரீபரதாழ்வானுக்கு அன்று,Andru - அக் காலத்திலே அடி நிலை,Adi Nilai - ஸ்ரீபாதுகைகளை ஈந்தானை,Einthaanaai - அளித்தருளின இராமபிரானை பாடிப் பற,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற அயோத்தியர்,Ayoththiyar - அயோத்தியையிலுள்ளவர்களுக்கு கோமானை,Komaanaai - அரசனானவனை, பாடிப்பற |