| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 313 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 7 | காளியன் பொய்கை கலங்கப் பாய்ந் திட்டு அவன் நீள் முடி யைந்திலும் நின்று நடம் செய்து மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன் தோள் வலி வீரமே பாடிப் பற தூமணி வண்ணனைப் பாடிப் பற–3-9-7 | காளியன் பொய்கை,Kaaliyan Poigai - காளியன் கிடந்த பொய்கையானது கலங்க,Kalanga - கலங்கும்படி பாய்ந்திட்டு,Paayndhittu - (அதில்) குதித்து அவன்,Avan - அக் காளியனுடைய நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து,Neel Mudi Aindhilum Nindru Nadam Seithu - ஆகாசத்தளவும் நீண்ட ஐந்து படங்களின் மேலும் நின்று கூத்தாடி, மீள,Meela - அவன் இளைத்துச் சரணம் புகுந்த பிறகு. அவனுக்கு,Avanukku - அக் காளியனுக்கு அருள் செய்து,Arul Seithu - (ப்ராணன் நிற்கும்படி) க்ருபை செய்தருளின் வித்தகன்,Viththagan - லிஸ்மயநீயனான கண்ணபிரானுடைய தோள் வலி,Thol Vali - புஜ பலத்தையும் வீரம்,Veeram - வீரப் பாட்டையும் பாடிப் பற; தூ மணி,Thoo Mani - பழிப்பற்ற நீலமணி போன்ற வண்ணனை,Vannanai - நிறத்தை யுடையவனை பாடிப் பற |