| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 314 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (ஒன்பதாம் திருமொழி - என்னாதன் (க்ருஷ்ணாவதார ராமாவதாரங்களின் குணசேஷ்டிதங்களை இறண்டு தோழியர் எதிரெதிராகக்கூறி உந்திபறித்தல்) (கலித்தாழிசை) 8 | தார்க்கு இளந் தம்பிக்கு அரசீந்து தண்டகம் நூற்றவள் சொல் கொண்டு போகி நுடங்கிடைச் சூர்ப்ப ணகாவைச் செவி யொடு மூக்கு அவ ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற அயோத்திக் கரசனைப் பாடிப் பற–3-9-8 | தார்க்கு,Tharkku - மாலை யிட்டு ராஜ்யம் நிர்வஹிக்கைக்கு இளந்,Ilann - (தகுந்திராத) இனம் பருவத்தை யுடையவனான தம்பிக்கு,Thambikku - பரதாழ்வானுக்கு அரசு ஈந்து,Arasu Eindhu - (அடி சூடுகையாகிற) அரசைக் கொடுத்து, நூற்றவள்,Noorrthaval - (இராமனைக் காட்டுக்குச் செலுத்தக் கடவோம் என்று) எண்ணம் கொண்ட கைகேயியினுடைய சொல் கொண்டு,Sol Kondu - சொல்லை ஏற்றுக் கொண்டு தண்டகம்,Thandhagam - தண்ட காரண்யத்துக்கு போகி,Poagi - எழுந்தருளி (அவ்விடத்தில்) நுடங்கு இடை,Nutangu Idai - துவண்ட இடையை உடையனான சூர்ப்பண சாவை,Soorppana Saavai - சூர்ப்பணகையினுடைய செவியொடு மூக்கு,Seviyodu Mookku - காதையும் மூக்கையும் அவன் ஆர்க்க அரித்தானை,Avan Aarkka Ariththaanai - அவன் கதறும்படி அறுத்த இராம பிரானை பாடிப் பற;,Paadip Para - பாடிக் கொண்டு உந்திப்பற; எம் பிரான் வன்மையை பாடிப் பற அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற,Ayoththikku Arasanai Paadip Para - அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற |