திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3162 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3162திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி – அநந்தரம் -நம்பியுடைய ஒப்பனை அழகும் தோளும் சர்வ தேசத்திலும் வந்து நின்று அனுபவ விஷயமாகா நின்றது -என்கிறாள்) 2
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும் மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2
பதவுரை Show / Hide
அன்னையீர் கான்,Annaimeer kaan - தாய்மார்களே!
என்னை முனியாதே,Ennai muniyathe - என்னை வீணாகச் சீறாமல்
என் நெஞ்சினால்,En nenjinaal - எனது நெஞ்சைக் கொண்டு
நோக்கி காணீர்,Nokki kaaneer - அநுபவித்துப் பாருங்கோள்;
தென் நெல் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்;,Then nel solai thirukkudungudi nambiyai naan kandapin; - தென் நெல் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்;
மின்னும் நூலும்,Minnum noolum - பளபளவென்று ஜ்வலிக்கிற பூணூலும்.
குண்டலமும்,Kundalamum - மகர குண்டலமும்
மார்பில்,Maarbil - திருமார்பில் விளங்குகின்ற
திருமறுவும்,Thirumaruvum - ஸ்ரீவத்ஸமும்
மன்னு பூணும்,Mannu poonum - எப்போது கழற்றாத ஆபரணங்களும்
நான்கு தோளும்,Naangu tholum - சதுர்ப்புஜமும்
எங்கும்,Engum - நான் போயிடமெங்கும்
வந்து நின்றிடும்,Vandhu nindridum - வந்து நிற்கின்றன.