திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3162 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி – அநந்தரம் -நம்பியுடைய ஒப்பனை அழகும் தோளும் சர்வ தேசத்திலும் வந்து நின்று அனுபவ விஷயமாகா நின்றது -என்கிறாள்) 2 | என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2 | பதவுரை Show / Hideஅன்னையீர் கான்,Annaimeer kaan - தாய்மார்களே! என்னை முனியாதே,Ennai muniyathe - என்னை வீணாகச் சீறாமல் என் நெஞ்சினால்,En nenjinaal - எனது நெஞ்சைக் கொண்டு நோக்கி காணீர்,Nokki kaaneer - அநுபவித்துப் பாருங்கோள்; தென் நெல் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்;,Then nel solai thirukkudungudi nambiyai naan kandapin; - தென் நெல் சோலை திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்; மின்னும் நூலும்,Minnum noolum - பளபளவென்று ஜ்வலிக்கிற பூணூலும். குண்டலமும்,Kundalamum - மகர குண்டலமும் மார்பில்,Maarbil - திருமார்பில் விளங்குகின்ற திருமறுவும்,Thirumaruvum - ஸ்ரீவத்ஸமும் மன்னு பூணும்,Mannu poonum - எப்போது கழற்றாத ஆபரணங்களும் நான்கு தோளும்,Naangu tholum - சதுர்ப்புஜமும் எங்கும்,Engum - நான் போயிடமெங்கும் வந்து நின்றிடும்,Vandhu nindridum - வந்து நிற்கின்றன. |