திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3163 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி - நம்பியுடைய திவ்யாயுத வர்க்கம் உள்ளும் புறமும் ஓக்கத் தோற்றா நின்றது என்கிறாள்.) 3 | நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3 | பதவுரை Show / Hideஅன்னையரும்,Annaiyarum - தாய்மாரான நீங்களும் (என்னைப்பற்றி) நின்றிடும் என்று,Nindridum endru - இப்பெண் ஸ்தப்தையாய் நிற்கின்றாளென்று சொல்லியும் திசைக்கும் என்று,Thisaikkum endru - இப்பெண் அறிவழிந்து கிடக்கிறாளென்று சொல்லியும் நையும் என்று,Naiyum endru - இப்பெண் நைநின்றாளென்று சொல்லியும் முனிதிர்,Munithir - வெறுத்துரைக்கின்றீர்கள்; குன்றம் மாடம்,Kundram maadam - குன்றம்போன்ற மாடங்கணிந்த திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Thirukkudungudi nambiyai naan kanda pin-; - திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-; வென்றி வில்லும்,Vendri villum - ஜயசீலமான சார்ங்கமும் தண்டும்,Thandum - லௌமோதகியென்கிற கதையும் வாளும்,Vaalum - நந்தாவாளும் சக்கரமும் சங்கும்,Chakkaramum sangum - திருவாழி திருச்சங்குகளும் நின்று,Nindru - நிரந்தரமாக நின்று கண்ணுள் தோன்றி,Kannul thondri - என் கண்ணுள்ளே காணப்பட்டு நீங்கா,Neengaa - நீங்குகின்றனவில்லை; நெஞ்சுள்ளும்,Nenjullum - நெஞ்சினுள்ளும் நீங்கா,Neengaa - நீங்குகின்றனவில்லை. |