திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3166 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3166திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் திரு முக சோபையோடே கூடின ரூப தேஜஸ் வைலக்ஷண்யம் என் நெஞ்சிலே பூர்ணமாயிற்று என்கிறாள் .) 6
மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள் சோலை சூழ் தண் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின் கோல நீள் கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனி வாயும் நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6
பதவுரை Show / Hide
இவன்,Ivan - இப்பெண்பிள்ளை
நம் குலக்கு,Nam kulakku - நமது ப்ரபர்ரஸத்தானத்திற்கு
மேலும்,Melum - காலமுள்ளதனையும்
வன் பழி என்று,Van pazi endru - பெருத்த பழியாயிருப்பவன்’ என்று சொல்லி
அன்னை,Annai - தாயானவள்
காணகொடான்,Kaanakodaan - நான் நம்பியை ஸேவிக்கவொண்ணாதபடி நடை நின்றாள்.
சோலை சூழ் தன் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Solai soozh than thirukkudungudi nambiyai naan kanda pin-; - சோலை சூழ் தன் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;
கோலம்,Kolam - அழகியதாய்
நின்,Nin - நீண்டதான
கொடி மூக்கும்,Kodi mookkum - கற்பகக் கொடிபோன்ற திருமூக்கும்
தாமரை கண்ணும்,Thaamaraikannum - தாமரைபோன்ற திருக்கண்களும்
கனி வரவும்,Kani varavum - பழுத்த பழம் போன்ற அதரமும்
நீலம் மேனியும்,Neelam maaniyum - நீல நிறத்ததான திருமேனியும்
நான்கு தோளும்,Naangu tholum - நான்கு திருத்தோள்களும்
என் நெஞ்சம்,En nenjam - எனது நெஞ்சிலே
நிறைந்தன,Nirainthana - நிரம்பியிருக்கின்றன.