திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3167 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3167திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -நம்பியுடைய திருமேனி அழகு வெள்ளம் என்னுடைய நெஞ்சில் வேர் விழுந்தது என்கிறாள்.) 7
நிறைந்த வன் பழி நம் குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள் சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும் நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7
பதவுரை Show / Hide
இவள் என் குடிக்கு,Ival en kudikku - ‘இப்பெண்பிள்ளை நம்முடைய ப்ரபந்த ஸந்தானத்திற்கு
சிதைந்த நல்வழி என்று,Sithaintha nalvazhi endru - நிலைத்துநிற்கக் கூடிய கொடிய பழியாயிருப்பவள் என்று சொல்லி
அன்னை,Annai - தாயானவள்
காண கொடான்,Kaana kodaan - நம்பியை ஸேவிக்க வொட்டுகிறதில்லை
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Sirandha keerthith thirukkudungudi nambiyai naan kanda pin-; - சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;
நிறைந்த,Niraindha - பரிபூர்ணமான
சோதி வெள்ளம் சூழ்ந்த,Sothi vellam soozhndha - தேஜஸ்ஸமூஹத்தாலே சூழப்பட்டு
நீண்ட,Neenda - உத்துங்கமான
பொன்மேனியோடும்,Pon maaniyodum - திருமேணியோடுகூட
என் உள்ளே,En ullae - எனது நெஞ்சுக்குள்ளே
நிறைந்து நின்று ஒழிந்தான்,Niraindhu nindru ozhindhaan - வியாபித்து நின்று விட்டான்;
நேமி,Nemi - திருவாழியும்
அம் கை,Am kai - அழகிய திருக்கையிலே
உனது,Unadhu - உள்ளதாயிருக்கின்றது.