திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3169 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அழகு எல்லாவற்றோடும் கூட நம்பி வந்து என் நெஞ்சிலே புகுந்து எனக்கு மறக்க ஒண்ணாத படி ஒரு க்ஷணமும் என் நெஞ்சை விட்டு போகிறிலன் என்கிறாள்.) 9 | முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் பால் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9 | பதவுரை Show / Hideமுன் நின்றாய் என்று,Mun nindraai endru - (சிறுக்கியான நீ) பலர் காணவந்து நிற்கின்றாய்? என்று என்னை நோக்கிச் சொல்லி தோழியர்களும் அன்னையரும்,Thoziyaragalum annaiyarum - தோழியர்களும் தாய்மார்களுமான நீங்கள் முனிதிர்,Munithir - கண்டிக்கின்றீர்கள் மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-;,Mannu maada thirukkudungudi nambiyai naan kanda pin-; - மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்-; சென்னி,Senni - திருமுடியிலே நீள்,Neel - நீண்டு தோன்றுகிற முடி ஆதி ஆய,Mudi aadhi aaya - திருவபிக்ஷேகம் முதலாகவுள்ள உவம்பு இல்,Uvampu il - எண்ணிறந்த அணி கலத்தன்,Ani kalathaan - சேர்த்தியழகு போருந்திய திருவாபரணங்களையுடைய அப்பெருமான் கன்னல்பால் அமுது ஆகி வந்து,Kannalpaal amuthu aagi vandhu - கண்ணனும் பாலும் அமுதமும் போலே பரம யோக்யனாய்வந்து என் நெஞ்சம் சுழியான்,En nenjam suzhiyaan - எனது நெஞ்சை விட்டுப் பேர்கின்றிலன் |