திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3170 | திருவாய்மொழி || (5-5–எங்ஙனேயோ அன்னை மீர்காள்) (உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைத்தல் (திருக்குறுங்குடி)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நம்பியுடைய திருமேனி என் நெஞ்சில் பிரகாசிக்கிற படி ஒருவருக்கும் கோசாரம் அன்று என்கிறாள்.) 10 | கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக் கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத் தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10 | பதவுரை Show / Hideஇவள்,Ival - இப்பெண்பிள்ளை கழிய மிக்கது ஓர் காதலன் என்று,Kazhiya mikkaadhu or kaadhalan endru - மிகவும் அதிசயித்த விலஷணமான காதலையுடையவள் என்று சொல்லி அன்னை,Annai - தாயானவள் காண கொடான்,Kaana kodaan - நம்பியை ஸேவிக்க வொட்டுகிறதில்லை ஏழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-;,Ezh il keerthith thirukkudungudi nambiyai naan kanda pin-; - ஏழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்-; தேவர் குழாங்கள்,Devar kuzhaangal - நித்ய ஸூரிகளின் திரள்கள் குழுவி,Kuzhuvu - நெருங்கி கை தொழ,Kai thozha - ஸேவிக்கும்படி சோதிவெள்ளத்தின் உள்ளே,Sothi vellathin ullae - தேஜஸ்ஸமுஹத்தினிடையிலே எழுவது,Ezhuvadhu - எழுகின்ற ஓர் உரு,Or uru - விலக்ஷணமான விக்ரஹமானது என் நெஞ்சுள் எழும்,En nenjul ezhum - எனது நெஞ்சுக்குள்ளே பிரகாசிக்கின்றது; (அது) ஆர்க்கும்,Aarkkum - எப்படிப்பட்டவர்கட்கும் அறிவு அரிது,Arivu aridhu - அறியமுடியாததேயாகும். |