திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3172 | திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என் மகள் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வியாபாரங்கள் எல்லாம் பண்ணினேன் என்னா நின்றாள்இது எம்பெருமான் தன் பக்கல் ஆவேசிக்க சொல்லுகிறாப் போலே இருந்தது என்கிறாள்.) 1 | கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத் தீசன் வந்து ஏறக் கொலோ?
கடல் ஞாலத் தீர்க்கிவை என் சொல்லுகேன்?
கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே.–5-6-1 | பதவுரை Show / Hideகடல் ஞாலத்து என் மகள்,Kadal Gnalaathu en magal - கடல்சூழ்ந்த வுலகத்திலுள்ளவரான எனது பெண்பிள்ளை. கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்,Kadal Gnalam seydaenum yaane ennum - கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைப் படைத்தவளும் நானேயென்கிறாள்; கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னம்,Kadal Gnalam aavenum yaane ennam - (படைக்கப்பட்ட) கடல் ஞாலத்திலே அநுப்ரவேசித்திருப்பவளும்! நானேயென்கிறாள்; கடல் ஞானம் கொண்டேனும் யானே என்றும்,Kadal gnanam kondenum yaane endrum - (மஹாபலியிடத்தில்) கடல் ஞானத்தை இரந்து பெற்றுக் கொண்டவளும் நானே யென்கிறாள். கடல் ஞானம் கீண்டேனும் என்னும்,Kadal gnanam keendenum ennum - (மஹாவரஹமாகிக்) கடல் ஞானத்தை உத்தரித்தகளும் நானே யென்கிறாள்; கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்,Kadal Gnalam undaenum yaane ennum - (பிரளயத்தில்) கடல் ஞானத்தை உள்ளே வைதபுது நோக்கினவரும் நானே யென்கிறாள். கற்கின்ற இவை,Karkindra ivai - (இப்பெண்பிள்ளை) இங்ஙனம் பேசுகிற இங்ஙனம் பேசுகிற இப்பேச்சுக்கள் கடல் ஞாலத்து நான் வந்து ஏற கொலோ,Kadal Gnalaathu naan vandhu yeRa kolo - கடல்சூழ்ந்த மண்ணுலகுக்குத் தலைவனான பெருமான் வந்து ஆவேசித்ததனாலே! கடல் ஞானத்தீர்க்கு,Kadal Gnanatheerkku - இவ்வுலகிலுள்ள உங்களுக்கு என் சொல்லுகேன்,En sollugeen - என்னவென்று சொல்லுவேன்? |