திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3174 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3174திருவாய்மொழி || (5-6–கடல்ஞாலம்) ("தலைவன் தன்மைகளைத் தன்னதாகக்கொண்டு பேசும் தலைவியின் நிலைகண்ட தாய் ‘ஆவேசமோ என்று நொந்து கூறல்") (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –அபரிச்சேதயமான ப்ருதிவ்யாதி பூத பஞ்சகமும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.) 3
காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும் காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் காண்கின்ற இக் காற்றெல்லாம் யானே என்னும் காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல் வண்ணன் ஏறக் கொலோ? காண்கின்ற உலகத்தீர்க் கென் சொல்லுகேன்? காண்கின்ற என் காரிகை செய்கின்றவே.–5-6-3
பதவுரை Show / Hide
காண்கின்ற என் காரிகை,Kaanginra en kaarigai - பகவத் விஷயத்தை உள்ளபடி கண்டு பேசுகிற என் மகள்
காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்,Kaanginra nilam ellaam yaane ennum - காணப்படுகிற பூமியெல்லாம் நானேயென்கிறாள்
காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்,Kaanginra visumbu ellaam yaane ennum - காணப்படுகிற ஆகாசமெல்லாம் யானே யென்கிறாள்;
காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும்,Kaanginra vem thee ellaam yaane ennum - காணப்படுகின்ற தேஜ: புஞ்சமும் யானே யென்கிறாள்;
காண்கின்ற இ காற்று எல்லாம் யானே என்னும்,Kaanginra i kaatru ellaam yaane ennum - காணப்படுகின்ற வாயுக்களும் யானே யென்கிறாள்;
காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்,Kaanginra kadal ellaam yaane ennum - காணப்படுகின்ற ஜலதத்துவமெல்லாம் யானே யென்கிறாள்; (இப்படி இவள் சொல்லுவதானது)
காண்கின்ற கடல்வண்ணன் ஏறகொலோ,Kaanginra kadalvannan eerakolo - அழகிய கடல்போன்ற வடிவையுடைய எம்பெருமான் வந்து ஆவேசித்ததனாலோ?
செய்கின்ற,Seikinra - (இப்பெண் பிள்ளை) செய்கிறவைகளை
காண்கின்ற உலகத்தீர்க்கு,Kaanginra ulagaththirkku - இவ்வுலகமல்லது மற்றொன்று காணதவுங்களுக்கு
என் சொல்லுகேன்,En sollugean - என்னவென்று எடுத்துக் கூறுவேன்?