திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 318 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
318பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 1
நெறிந்த கருங் குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம் செறிந்த மணி முடிச் சனகன் சிலை யிறுத்து நினைக் கொணர்ந்தது அறிந்து அரசு களை கட்ட அருந்தவத்தோன் இடை விலங்க செறிந்த சிலை கொடு தவத்தைச் சிதைத்ததும் ஓரடையாளம்–3-10-1
பதவுரை Show / Hide
நெறிந்த கருங்குழல்,Nerindha Karunguzhal - நெறிப்புக் கொண்ட கரிய கூந்தலை யுடையவளும்
மடவாய்,Madavaai - மடப்பத்தை யுடையவளுமான பிராட்டீ!
நின் அடியேன்,Nin Adiyen - உமது அடியவனான என்னுடைய
விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபகம் (ஒன்றைக் கேட்டருள வேணும்):
செறிந்த,Serindha - நெருங்கின
மணி,Mani - ரத்நங்களை யுடைய
முடி,Mudi - கிரீடத்தை அணிந்த
சனகன்,Sanagan - ஜநக மஹாராஜன் (கந்யா சுல்யமாக ஏற்படுத்தின)
சிலை,Silai - ருத்ர தநுஸ்ஸை
இறுத்து,Iruththu - முறித்து
நினை,Nina - உம்மை (பிராட்டியை)
கொணர்ந்தது,Konarnthathu - மணம் புரிந்து கொண்டதை
அறிந்து,Arindhu - தெரிந்து கொண்டு
அரசு களை கட்ட,Arasu Kalai Katta - (துஷ்ட) ராஜாக்களை (ப்பயிருக்கு)க்களை களைவது போலழித்த
அருந் தவத்தோன்,Arun Thavaththon - அரிய தவத்தை யுடைய பரசுராமன்
இடை விலங்க,Idai - நடு வழியில் தடுக்க
செறிந்த சிலை கொடு,Nadu Vazhiyil Thadukka - (தனக்குத்) தகுந்த (அப்பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு) தநுஸ்ஸை வாங்கிக் கொண்டு
தவத்தை,Thavaththai - (அப் பரசுராமனுடைய) தபஸ்ஸை
சிதைத்ததும்,Sithaiththadhum - அழித்ததும்
ஓர் அடையாளம்,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.