திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 319 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
319பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 2
அல்லியம் பூ மலர்க் கோதாய் அடி பணிந்தேன் விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மட மானே எல்லியம் போதினி திருத்தல் இருந்ததோரிட வகையில் மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்–3-10-2
பதவுரை Show / Hide
அல்லி,Alli - அகவிதழ்களை யுடைய
அம் பூ,Am Poo - அழகிய பூக்களால் தொடுக்கப் பட்ட
மலர்க் கோதாய்,Malark Kothai - பூமாலை போன்றவளே!
அடி பணிந்தேன்,Adi Panindhen - (உமது) திருவடிகளில் வணங்கிய நான்
விண்ணப்பம்,Vinnappam - விஜ்ஞாபநமொன்றை
சொல்லு கேன்,Sollu Kaen - (உம்மிடத்தில்) சொல்லுவேன்;
துணை மலர் கண்,Thunai Malar Kan - ஒன்றோடொன்று ஒத்துத் தாமரை மலர் போன்ற கண்களையும்
மடம்,Madam - மடப்பத்தையு முடைய
மானே,Maanae - மான் போன்றவளே!
கேட்டருளாய்,Kaettarulai - (அதைத்) திருச் செவி சாத்த வேணும்;
அம் எல்லி போது,Am Elli Podhu - அழகிய இராத்திரி வேளையில்
இனிது இருத்தல்,Inidhu Iruththal - இனிமையான இருப்பாக
இருந்தது,Irundhathu - இருந்ததான
ஒர் இடம் வகையில்,Or Idam Vagaiyil - ஓரிடத்தில்
மல்லிகை,Malligai - மல்லிகைப் பூவினால் தொடக்கப்பட்ட
மா மாலை கொண்டு,Maa Maalai Kondu - சிறந்த மாலையினால்
ஆர்த்ததும்,Aarththadhum - (நீர் இராம பிரானைக்) கட்டியதும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.