Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 32 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
32ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து- இரண்டாம் திருமொழி - சீதக்கடல்) (கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்) 10
பெருமா வுரலில் பிணிப் புண்டிருந்து அங்கு
இருமா மருதம் இறுத்த இப் பிள்ளை
குரு மா மணிப் பூண் குலாவித் திகழும்
திரு மார்பு இருந்தவா காணீரே சேயிழையீர் வந்து காணீரே–1-2-10
பெரு மா உரலில்,Peru maa uralil - மிகப்பெரிய உரலோடு
பிணிப்புண்டு,Pinippundu - கட்டுண்டிருந்து இருந்து
அங்கு,Angu - அந்த நிலைமையிலே
இரு மா மருதம்,Eru maa marutham - இரண்டு பெரிய மருத மரங்களை
இறுத்த,Eruththa - முறித்தருளின
இ பிள்ளை,E pillai - இக் கண்ண பிரானுடைய,
குரு மா,Guru maa - மிகவும் சிறந்த
மணி பூண்,Mani poon - கௌஸ்துபாபரணமானது
குலாவி திகழும்,Kulaavi thigazhum - அசைந்து விளங்கா நின்றுள்ள
திருமார்வு இருந்த ஆ காணீரே,Thirumaarvu irundha aa kaanire - திருமார்வு இருந்த ஆ காணீர்!
சே இழையீர் வந்து காணீரே,Se izhaiyeer vandhu kaanire - செவ்விய ஆபரணங்களை யுடைய பெண்காள் வந்து காணீர்!