| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 320 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 3 | கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும் அங்கு ஏகியது ஓரடையாளம்–3-10-3 | கைகேசி,Kaikaesi - கைகேயியானவள் கலக்கிய மா மனத்தனன் ஆய்,Kalakkiya Maa Manaththanan Aay - (மந்தாரையினாள்) கலக்கப்பட்ட சிறந்த மனத்தை யுடையவளாய் வரம் வேண்ட,Varam Venda - (தசரதர் முன் தனக்குக் கொடுத்திருந்த) வரங்களின் பயனைக் கேட்க மலக்கிய,Malakkiya - (அக் கைகேயியின் வார்த்தையால்) கலக்கமடைந்த மா மனத்தனன் ஆய்,Maa Manaththanan Aay - சிறந்த மனத்தை யுடையவனாய் மன்னவனும்,Mannavanum - தசரத சக்ரவர்த்தியும் மறாது,Maraadhu - மறுத்துச் சொல்ல முடியாமல் ஒழிய,Oliya - வெறுமனே கிடக்க, குலம் குமரா,Kulam Kumaraa - (அந்த ஸந்தர்ப்பத்தில் கைகேயியானவள்,) “உயர் குலத்திற்பிறந்த குமாரனே) காடு உறைய,Kaadu Uraiya - காட்டிலே (பதினான்கு வருஷம்) வஸிக்கும்படி போ என்று,Poa Endru - போய் வா” என்று சொல்லி விடை கொடுப்ப,Vidai Koduppa - விடை கொடுத்தனுப்ப அங்கு,Angu - அக் காட்டிலே இலக்குமணன் தன்னொடும்,Ilakkuamanan Thannodum - லக்ஷ்மணனோடு கூட ஏகியது,Eagiyathu - (இராமபிரான்) சென்றடைந்ததும் ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும். |