Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 322 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
322ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல் (இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு, சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக் கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்) கலிவிருத்தம் 5
மானமரு மெல் நோக்கி வைதேவீ விண்ணப்பம்
கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழிற் சாரல் சித்திர கூடத்து இருப்ப
பால் மொழியாய் பரத நம்பி பணிந்ததும் ஓரடையாளம்-3-10-5
மான் அமரும்,Maan Amarum - மானை யொத்த
மென் நோக்கி,Men Nookki - மென்மையான கண்களை யுடையவளான
பால் மொழியாய்,Paal Mozhiyaai - பால் போல் இனியபேச்சை யுடையவளே!
விண்ணப்பம்;,Vinnappam - ஒரு விஜ்ஞாபகம்;
கான் அமரும்,Kaan Amarum - காட்டில் பொருந்திய
கல் அதர் போய்,Kal Adhar Poi - கல் நிறைந்த வழியிலேயே
காடு உறைந்த காலத்து,Kaadu Uraindha Kaalaththu - காட்டில் வஸித்த போது
தேன் அமரும் பொழில்,Then Amarum Pozhil - வண்டுகள் பொருந்திய சோலைகளை யுடைய
சாரல்,Saaral - தாழ்வரையோடு கூடிய
சித்திர கூடத்து,Siththira Koodaththu - சித்திர கூட பர்வதத்தில்
இருப்ப,Irup - நீங்கள் இருக்கையில்
பரதன் நம்பி,Barathan Nambi - பரதாழ்வான்
பணிந்ததும்,Panindhadum - வந்து வணங்கியதும்
ஓர் அடையாளம்.,Or Adaiyaalam - ஒரு அடையாளமாகும்.